முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடற்கரையில் சட்டவிரோதமாக கூடினால் கைது - சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை கடற்கரையில் சட்டவிரோதமாக கூடினால் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

ஈழப் படுகொலை நினைவேந்தலுக்கு அனுமதி கோரி சிலர் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து தற்போது கடற்கரையில் யாரையும் கூட விடாமல் காவல்துரையினர் கண்கானித்துவருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதிய தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் விதிமுறைகளை மீறி குழுமினாலோ, கூட்டம் நடத்த முற்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையின் அழகை பாதுகாக்கும் வகையில் மெரினா கடற்கரையில் கூட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிதிகளுக்கு மாறாக மெரினாவில் குழுவாக கூடுவது. கூட்டங்கள் நடத்துவது சட்டவிரோதமாகும் என காவல் துறை தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்