முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் மரணமடைந்த நாகை நிர்வாகி குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சாலை விபத்தில் மரணமடைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு, கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்  நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர்  ஆர். கண்ணையன், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்று தாம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சாலை விபத்தில் அகால மரணமடைந்த  கண்ணையனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்