முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      தூத்துக்குடி

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மழை பொய்த்து போனதால் விவசாயம் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வற்றாத ஜீவநதிகள் கூட வறண்டு மேடாக காட்சியளிக்கிறது. இதனால் தமிழகத்தில் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கோயில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று வருண ஜெபம் நடந்தது.

 வருண ஜெபம்

இக்கோயிலில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு இடையே உள்ள யாகசாலை மண்டபத்தில் மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. இதற்காக காலை 7 மணிக்கு கோயில் விதாயகர்த்தா சிவசாமி சாஸ்திரிகள் தலைமையில் வேத விற்பனைர்கள் ஜெபம் செய்தனர். முதலில் அனுக்ஞை பூஜை, புண்ணியாக வாஜனம், வருண கும்பம் ஆவாகனம் செய்யப்பட்டதும், பரிஜார்த்திய சுத்த ஜெபம், காசி விஸ்வநாதர் அபிஷேகம் ஆகியவை நடந்தது. கோயிலில் வருண ஜெபம் நிறைவு செய்யப்பட்டதும் பூஜை செய்யப்பட்ட வருண கும்பம் மேளதாளங்கள் முழங்க கடலுக்கு எடுத்துவரப்பட்டு புனித நீர் கடலில விடப்பட்டது.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் பத்மநாபபிள்ளை, மேலாளர் அய்யாபிள்ளை, சந்தணம் செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதாராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago