முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு தேர்வு: தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      திருநெல்வேலி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

 100 சதவீத தேர்ச்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவிகள் ராஜ அனுசுயா, காயத்ரி பிரியதர்சினி, ஆபிரா ஜைனப் ஆகிய 3 பேரும் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இவர்கள் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:  ராஜ அனுசுயா தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. காயத்ரி பிரியதர்சினி தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. ஆபிரா ஜைனப் தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100.

39 பேர் 100க்கு 100

மாணவி முத்துமீனா 496 மதிப்பெண்ணும், மாணவி லாவண்யா 495 மதிப்பெண்கள் பெற்றனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 18 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 31 பேரும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 45 பேரும், 450 மதிப்பெண்களுக்கு க்கு மேல் 60 பேரும் பெற்றனர். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் ராஜ அனுசுயா, காயத்ரிபிரியதரிசினி, முத்துமீனா, ஜேஸ்பர் சாம்லின் ஜாய், கவிதா, மகேஸ்வரி ஆகிய 6 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் 11 பேரும், அறிவியலில் 13 பேரும், சமூக அறிவியலில் 39 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். தமிழ் பாடத்தில் ஆபிரா ஜைனப், லாவண்யா, முத்துமீனா, சுப்புலெட்சுமி ஆகியோர் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கில பாடத்தில் ராஜ அனுசுயா, ஆபிரா ஜைனப், காயத்ரி பிரியதர்சினி, சுப்புலெட்சுமி, ஜனோ ஜோஷ்பா ஆகியோர் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனர்.

பாராட்டு

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்