எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, பாரியூர் ஊராட்சி, வெள்ளாளபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் டிசம்பர் 2017 வரை நடைபெறவுள்ள சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
கால்நடை பாதுகாப்பு துறை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை மக்களுக்கு வழங்கி செயல்படுத்தியுள்ளார்கள். அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் மே-2017 முதல் டிசம்பர் 2017 வரை சிறப்பாக நடைபெற உள்ளது. வெள்ளாளபாளையம் பகுதியில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 2017 வரை நடைபெறவுள்ள 216 சிறப்பு முகாம்களின் மூலம் சுமார் 2,16,000 கால்நடைகள் பயன்பெறவுள்ளன. இம்முகாம்களில் பங்குபெற உள்ள கால்நடைகளுக்கு பொது உடல்நல சிகிச்சை, தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், சினை தரிக்காத கால்நடைகளுக்கென சிறப்பு சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. கோழிகளுக்கு கோழி காய்ச்சல் நோய் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. 216 முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 216 கிராமப்பகுதிகளில் நடைபெறவுள்ளது. இம்முகாம்களுக்கு என ரூ.9,07,200/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
எனவே கால்நடை பராமரிப்பு துறை மட்டுமின்றி ஒவ்வொரு துறைகளும் சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் மூலம் அறிவிக்கப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைந்து வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் குழந்தைகள் நல்லவொரு கல்யாளர்களாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு வகையான மாற்றங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வி துறை செய்து வருகிறது. 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் தேர்வு முடிவு வெளிவரும் நாட்கள் என இரண்டு தேதிகளையும் தெரிவித்து அதே நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு சிறப்பான முறையில் பள்ளிக்கல்வி துறை செயல்பட்டு வருகிறது. சுமார் 20 இலட்சம் மாணவர்களுக்கு இரண்டு நிமிடங்களில் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் 1,21,00,000 மாணவர்களின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று நேரடியாக 12-ம் வகுப்பு செல்லும் முறையை மாற்றி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண பணிகள்
மாணவ, மாணவியர்களுக்கு எந்தவொரு இடர்பாடுகள் வந்தாலும் 24 மணிநேரத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக அதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விரைவில் கல்வித்துறையின் சார்பில் ஆணை வழங்கப்படவுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கான சீருடைகள் அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையான சீருடைகள் வழங்கப்படவுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 3 வகையான வண்ண சீருடைகள் வழங்கப்படவுள்ளது.
ஸ்மார்ட் கார்ட்டில்
அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முறையையும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் புகைப்படம், பெயர், தாய் தந்தையர் பெயர், பிறந்த தேதி, முகவரி, கைபேசி மற்றும் தொலைபேசி எண்கள், இரத்த வகைப்பாடு, குடும்ப அட்டை எண், ஆதார் அட்டை எண் இவை அனைத்தும் பதியப்பட்டு வழங்கப்படும். மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு எழுத பயிற்சி அளிப்பதற்கென சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறவுள்ளது. 32 மாவட்ட தலைநகரங்களில் இந்திய ஆட்சிப்பணிக்கென பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இவ்வகுப்புகளுக்கு ரூ.2.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் இந்திய ஆட்சிப்பணிக்கென படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஏற்றார்போல் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்பான பயிற்சிகள்
12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரங்களில் கூடுதலாக வாரத்திற்கு 3 நாட்கள் கூடுதல் வகுப்புகள் உருவாக்க உள்ளோம். விருப்பமுள்ள மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் மத்திய அரசு ஏற்படுத்துகின்ற எந்தவொரு தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவ, மாணவியர்கள் திறன்பட உள்ளனர் என்ற நிலையை உருவாக்கும் வகையில் இந்த திட்டங்கள் செய்யப்படவுள்ளது. வரும் காலங்களில் இன்று நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை மாற்றி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை மாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் , அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர்மட்ட குழு என அனைவரும் இணைந்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவ, மாணவியர்கள் எந்தவொரு தேர்வாக இருந்தாலும் சந்திக்கும் வல்லமை படைத்தவர்களாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த அரசு சிறப்பான எதிர்காலத்தை மாணவர்களுக்கு வழங்கும் என தெரிவித்தார்.
மேலும் இச்சிறப்பு முகாமில் நடைபெற்ற கிடாரி கன்று பேரணியில் தேர்வு செய்யப்பட்ட 4 சிறப்பு கிடாரி கன்றுகளுக்கு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஊக்கப்பரிசுகள் வழங்கினார்.
இச்சிறப்பு முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) ஆர்.ரவிச்சந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.