முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் அருகே நடந்த போராட்டத்தால் பரபரப்பு

திங்கட்கிழமை, 22 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன. இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்புதெரிவித்து, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் அமைந்துள்ள ரஜினிகாந்த் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற அவர்களை, கத்தீட்ரல் சாலையில் போலீசார் நிறுத்தினர். அப்போது முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்