முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்

திங்கட்கிழமை, 22 மே 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-- கொடைக்கானல் அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பழனி அருள் மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது கொடைக்கானல் அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் இந்த கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக கடந்த 18ம் தேதி முதல் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், விநாயகர் பூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

நேற்று காலை 9.15 மணிக்கு கொடைக்கானல் அருள் மிகு குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் ராஜ கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை அடுத்து அருள் மிகு குறிஞ்சி ஆண்டவர் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை செய்யப்பட்தை அடுத்து அண்ணதானம் நடந்தது.

இந்த மாகா கும்பாபிஷேகத்தை பழனி திருக்கோவில் பிராதான ஆசார்யர் அமிர்தலிங்க குருக்கள், பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் தேவாஸ்தான அச்சக ஸ்தானிகர் செல்வசுப்ரமண்ய சிவாசார்யார் ஆகியோர் தலைமையில் செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், பழனி இணை ஆணையர் ராஜமாணிக்கம், கொடைக்கானல் டி.எப்.ஓ. முருகன், கொடைக்கானல் நகராட்சி கமிசனர் சரவணன், பி.டி.ஓ பட்டு ராஜன், முன்னாள் நகர் மன்றத் தலைவர் கோவிந்தன், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் பொன்னுத்துரை, கொடைக்கானல் போலீஸ் டி.எஸ்.பி செல்வம், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்