முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருள்மிகு தீர்த்தகீரிஸ்வர் திருக்கோவிலில் அமைச்சர் அன்பழகன் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம்

திங்கட்கிழமை, 22 மே 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்தமலையில் உள்ள அருள்மிகு தீர்த்தகீரிஸ்வர் திருக் கோவிலில் மழை வேண்டி தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது.

சிறப்பு யாகம் மற்றும் பூஜை

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போன காரணத்தினால் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் மழை நீரை சேமிக்க குடி மராமத்து பணியை அரசு தொடங்கியது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும், அதிமுக மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்புயாகம் நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வர் திருக்கோயில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது.

இதில் விநாயகர், அம்மன், சிவபெருமாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. பின்பு நந்திஸ்வறரை சுற்றி சுவர் கட்டி அதில் தண்ணிர் நிரப்பி சிறப்பு யாகம் மற்றும் பூஜைசெய்து வழிப்பட்டனர். மற்றும் தருமபுரி கோட்டை கோயில், அதியமான் கோட்டை ஸ்ரீ தஷிணகாசி காலபைரவருக்கும், சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்