முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் இலக்கிய உலா சார்பில் பரிசளிப்பு விழா

திங்கட்கிழமை, 22 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டியில் அரசு பொது தேர்வில் 500க்கு 400 மற்றும் 400க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்த சாதனை மாணவ மாணவிகளுக்கு இலக்கிய உலா  மற்றும் ஜே இ எம்  ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து பரிசளித்து பாராட்டிய நிகழ்வு நடந்தது.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்வுக்கு இலக்கிய உலா இயக்குனர் வினோபா தலைமை வகித்தார். தமிழாசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இலக்கிய உலா ரவீந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.எம் அகடமி முத்துபாண்டியன் பேராயர் அந்தோணி சிங் ஆசியாபார்ம்ஸ் பாபு ஆகியோர் 22 பள்ளிகளை சார்ந்த 816 மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினார்கள். எஸ்.எம் அகாடமி நிறுவனர் அழகர்பாண்டியன் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெங்கம்மாள் கலைக்கோவில் கல்வி மையப் பொறுப்பாளர் ஆசிரியர் பிரபு நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எய்ம்ஸ் கல்வி மையப் பொறுப்பாளர் நன்றி கூறினார். பல்வேறு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள். பெற்றோர்கள், நகர பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்