முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் நாட்டை தீவிரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: பாக். ராணுவ தளபதி

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : எங்களது மண்ணை தீவிரவாதிகள் பிற நாட்டுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி பாஜ்வா கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி டேவிட் ஹேலே மற்றும் பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி ஜாதவ் பாஜ்வா இடையே அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே பரஸ்பர உறவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.

இச்சந்திப்பு குறித்து தலைமை ராணுவ அதிகாரி ஜாதவ் பாஜ்வா கூறும்போது, "இரு நாடுகளும் தங்கள் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானை தீவிரவாதிகள் பிற நாட்டுக்கு எதிராக பான்படுத்த அனுமதிக்க மாட்டோம்" என்றார்.  ஜாவத் பாஜ்வாவின் இந்த வெளிப்படையான கருத்துக்கு டேவி ஹேலே நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்