முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை தாலுக்கா அலுவலகத்தில் 3வது நாளாக ஜமாபந்தி 937 மனுக்கள் குவிந்தன உடனடி நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் 3வது நாளாக நேற்று ஜமாபந்தி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

ஜமாபந்தி

வருவாய், தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வருகிற 29ந் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜமாபந்தியில் வருவாய் நிர்வாக கணக்குகள் தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய்த்துறை தொடர்பான புகார்கள் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் 3வது நாளாக நேற்று (திங்கட்கிழமை) துரிஞ்சாபுரம் உள்வட்டத்துக்குட்பட்ட துரிஞ்சாபுரம், மல்லவாடி, ஊசாம்பாடி, சொரந்தை, களஸ்தம்பாடி, சடையனோடை, சானானந்தல், முனியந்தல், இனாம்காரியந்தல், வெங்காயவேலூர், சொரகொளத்தூர், வடகருங்காலிபாடி, மாதலம்பாடி, வடகரிம்பலூர், கூத்தலவாடி, கருந்துவாம்பாடி, கொளக்கரவாடி, பிச்சனந்தல், சீலபந்தல், இனாம்வெளுகனந்தல், தச்சம்பட்டு உள்வட்டத்துக்குட்பட்ட காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, சின்னகல்லப்பாடி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் தாசில்தார் ஆர்.ரவி, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, துரிஞ்சாபுரம் மண்டல துணை தாசில்தார் அமுல் அனைவரையும் வரவேற்றார். ஜமாபந்திக்கு தலைமையேற்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார். 3ம் நாளான நேற்று நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் மொத்தம் 937 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக 115 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தி.மலை மண்டல துணை தாசில்தார் பார்த்தசாரதி, தலைமை நில அளவர் ஆர்.வரதராஜன், தச்சம்பட்டு வருவாய் ஆய்வாளர் ஏ.முனுசாமி, வேளாண் உதவி இயக்குநர் சி.அரக்குமார், வேளாண் அலுவலர் கே.சந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஆர்.செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் வி.பலராமன், ஜீவிதா, பரணிதரன், வெங்கடேசன், ஜெயக்குமார், சத்தியதேவி, கே.காளிமுத்து, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.4ம் நாளான இன்று (புதன்கிழமை) தச்சம்பட்டு உள்வட்டத்துக்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்