முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கில் பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி

புதன்கிழமை, 24 மே 2017      நீலகிரி

அவதூறு வழக்கில் பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி ஊட்டி கோர்ட்டில் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

8 நடிகர்களுக்கு பிடியாணை

கடந்த 2009ம் ஆண்டு சென்னையில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தினர் நடத்திய கூட்டத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விஜயகுமார், அருண் விஜயகுமார், விவேக், ஸ்ரீ பிரியா, இயக்குநர் சேரன் ஆகிய 6 பேர் மீது ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஊட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ மரிய சூசை என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில்  15.05.2017 அன்று ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜராகாததை தொடர்ந்து  8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து குற்றவியல் நடுவர் செந்தில்குமார் ராஜவேலு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ரத்து செய்யக்கோரி மனு

இந்த செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியிகள் வெளியானதை தொடர்ந்து நேற்று நடிகர்கள் 8 பேரின் சார்பில் ஊட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன், ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார்,சத்யராஜ், விஜயகுமார், அருண் விஜயகுமார், விவேக், ஸ்ரீ பிரியா, இயக்குநர் சேரன் ஆகிய 8 பேர் மீது பிறப்பித்த பிடியாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விளக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என வழக்கறிஞர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்