முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வல்லம் தூய ரபேல் அதிதூதர் ஆலயத்தில் கொடிமரம் அர்ச்சிப்பு விழா

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசியை அடுத்துள்ள வல்லம் தூய இரபேல் அதிதூதர் ஆலயத்தில் வைத்து புதிய பங்கு உதயம் மற்றும் கொடிமரம் அர்ச்சிப்பு விழா நடந்தது.

 52வது பங்கு

விழாவில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜீடுபால்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டு புதிய பங்காக உயர்த்தப்பட்டது. இது பாளை மறைமாவட்டத்தின் 52வது பங்கு ஆகும். இப்பங்கு கொட்டாக்குளம் இலஞ்சி காசிமேஜர்புரம் தென்றல்நகர் வாஞ்சிநகர் மற்றும் பிரானூர் பார்டர் ஆகிய கிராம பகுதிகளை உள்ளடக்கியது.

கொடிமரம் அர்ச்சிப்பு

பாளை மறைமாவட்டமுன்மை குரு சேவியர்டெரன்ஸ் அடிகளார் செயலக முதல்வர் அந்தோணி ஏ.குருஸ்அடிகளார் தென்காசி மறைமாவட்ட அதிபர் சகாயசின்னப்பன் அடிகளார் ஆகியோர் முன்னிலைவகித்தனர். அதனைதொடர்ந்து இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி ஆரோக்கியராஜ் பொறுப்பேற்றார்கள் முன்னதாக வெண்கலத்தால் ஆன புதிய கொடிமரம் அர்ச்சிக்கப்பட்டது.

பலர் பங்கேற்பு

நிகழச்சியில் பாறை மறைமாவட்டத்தில் பணிபுரியும் அருட்பணியாளர்கள் அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனைதொடர்ந்து சிறுவர் சிறுமிகள் கலைநிகழச்சிகளும் சமபந்தி விருந்தும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வல்லம் தேர்வுநிலை பங்கின் பொறுப்பாளர் அருட்தந்தை ஆரோக்கிராஜ் தலைமையில் ஊர் பொதுமக்கள் அன்பியம் பக்த சபைகள் இயக்கங்கள்இறைமக்கள் மற்றும் கிளைக்கிராம இறைமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து