முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில்அரசு தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி :வேலைவாய்ப்பு அலுவலர் மணிவேல் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      பெரம்பலூர்
Image Unavailable

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று (26.05.17) குரூப் 2ஏ தேர்விற்கான இலவசப்பயிற்சி வகுப்பை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மணிவேல் துவக்கி வைத்தார்.

இலவச பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் மாணவ மாணவிகளுக்கு அவ்வப்போது அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் நடத்தப்படவுள்ள குரூப் 2 தேர்வுக்கும், மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எழுத்துத்தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஏற்கனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்கள் ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்களைக்கொண்டு சிறந்த முறையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றதுஇப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று இதுவரை 200க்கும் மேற்பட்ட மாவண-மாணவிகள் அரசுப்பணிக்குத் தேர்வாகியுள்ளனர். இன்றைய பயிற்சி வகுப்பில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். காலையில் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் அரசுப்பணியாளர் தேர்வாணையங்களின் தேர்வுக்கான பயிற்சிகளும், மதியம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தமிழக அரசின் இந்தப்பயிற்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து