முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் புதிய வழித்தடத்தில் அரசு டவுன்பஸ் இயக்கம்

சனிக்கிழமை, 27 மே 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம் தொகுதியில் கிராமப்புற மக்கள் பயன்பெற்றிடும் வகையில்   டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள கண்டியதேவன்பட்டி கிராமத்திலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு டி.குன்னத்தூர் வழியாக புதியவழித்தடத்தில் இயக்கப்படும் அரசு டவுன்பஸ்சை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம்,டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்டியத்தேவன்பட்டி மக்கள் , வில்லூர்,டி.குன்னத்தூர் திருமங்கலம் வழியே மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன்பஸ் இயக்கிட வேண்டுமென தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம்  கோரிக்கை விடுத்திருந்தனர்.இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக கண்டியதேவன்பட்டி கிராமக்கள் கேட்டுக் கொண்டதன் படி டி.குன்னத்தூர்,திருமங்கலம் வழியாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு புதியவழித்தடத்தில் அரசுடவுன்பஸ் இயக்கிட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை மண்டல நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி கண்டியத் தேவன்பட்டியில் மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமையில் நேற்று மதியம் நடைபெற்ற விழாவில்டி.குன்னத்தூர் திருமங்கலம் வழியாக புதிய வழித்தடத்தில் பெரியார் பேருந்து நிலையத்திற்கு காலை மாலை என தினம்தோறும் நான்குமுறை இயக்கப்படும் அரசுடவுன் பஸ்சை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தமிழக மக்களுக்காக வாழ்வினை அர்ப்பணித்த அம்மா அவர்களின் அரசில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க கிராமமக்களுக்காக சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை 100சதவீதம் செய்து கொடுத்திட சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி கண்டியதேவன்பட்டி கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று பெரியார் பேருந்து நிலையத்திற்கு வில்லூர்,டி.குன்னத்தூர்,திருமங்கலம் வழியாக புதிய வழித்தடத்தில் அரசுப்பேருந்து இயக்கப்படுகிறது.மக்களின் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுகிற ஒரே அரசு இந்தியாவிலே அம்மாவின் அரசு மட்டும் தான்.எனவே அம்மாவின் சத்திய வாக்கின்படி தமிழகத்தை 100ஆண்டுகள் கழகம் ஆள்வது நிச்சயம் என்று பேசினார்.முன்னதாக கண்டிய தேவன்பட்டியிலுள்ள ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் சென்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ்,அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ராஜாசுந்தர்,கூட்டாண்மை வணிக மேலாளர் துரைராஜ்,கோட்ட மேலாளர் முத்தையா,டி.கல்லுப்பட்டி கிளை மேலாளர் ராஜசேகர்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் பாவடியான்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,அவைதலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்மகம்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து