முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் உப்பாறு அணை மற்றும் நல்லதங்காள் ஓடை தூர் வாரும் பணி அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சனிக்கிழமை, 27 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  வட்டம், உப்பாறு அணை மற்றும் நல்லதங்காள் ஓடை தூர்வாரும் பணிகளை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளாச்சித்துறை  அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

144 நீர்நிலைகளில்

திருப்பூர் மாவட்டத்தில், உள்ள பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைப்புறம்போக்கு ஏரி, குளம் மற்றும் நீர்தேக்கங்களிலிருந்து விவசாயம், வீட்டு பொது உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் ஆகிய உபயோகங்களுக்காக வண்டல், சவுடு மண் மற்றும் கிராவல் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக்கொள்ள அரசாணை.50, தொழில் (எம்.எம்.சி1) துறை நாள் 27.04.2017-ன்படி தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன்படி மாவட்டத்தில் அமைந்துள்ள 144 நீர்நிலைகளில் வண்டல் மண் மற்றும் சவுடு மண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்காக திருப்பூர் மாவட்ட விவசாயிகள்  எவ்வித கட்டணமுமின்றி  இலவசமாக எடுத்து சென்று விவசாய நிலங்களில் பயன்படுத்தி உற்பத்தி திறன் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடவும் மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 1000-த்திற்க்கும் மேற்பட்ட விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். 

ஆய்வு

இதனைத்தொடர்ந்து, தாராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள உப்பாறு அணை  மற்றும்  நல்லதங்காள் ஓடை நீர் தேக்கம் ஆகிய அணைகளிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் தூர்வாரும் பணிகளை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், உப்பாறு அணையிலிருந்து அணையின் மொத்த பாசன பரப்பு 6,060 ஏக்கராகும். அணையில் படிந்துள்ள மொத்த வண்டல் மண் அளவு 1,18,000 கன மீட்டராகும் நேற்றைய நிலவரப்படி (26.05.2017) வரை 450 க.மீ வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. நல்ல தங்காள் நீர் தேக்கத்திலிருந்து அணையின் மொத்த கொள்ளவு 223.01. மி.க அடியாகும். அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவு 72,660 க.மீட்டராகும்.  மாவட்டத்தில் அமைந்துள்ள அணை மற்றும் நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் வழங்கப்பட்டு வருவதால் விவசாய பெருங்குடி மக்கள் இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்   வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  தெரிவித்தார்கள்.  

இந்தஆய்வின்போது, ஈரோடு நடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் வி.ராஜு, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவிப் பொறியாளர் குமார், அமராவதி கோட்டம் (தாராபுரம்) செயற்பொறியாளர் தர்மலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து