முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு எதிராக சந்தர்ப்பவாத கூட்டணி: மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : முரண்பட்ட கொள்கைகள் கொண்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கின்றன என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு வெங்கய்ய நாயுடு பதில் அளிக்கும்போது, “எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முயற்சிக்கின்றன. இது சந்தர்ப்ப வாத அணியாகும். கொள்கையற்ற கூட்டணி நீண்ட நாள் நீடிக்காது. திறமையான, ஸ்திரமான தலைமை அவர்களிடம் இல்லை. இது தேசிய ஜனநாயக கூட்டணி யில் மட்டுமே உள்ளது. 3 வகை பிரிவினர் மோடியால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழல், மதவாதம், சாதியவாதம் ஆகிய வற்றை மோடி ஒழித்துள்ளார். இதை அடிப்படையாகக் கொண்ட வர்கள் கவலையில் உள்ளனர்.

பிரதமர் மோடியை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்துப் பேசியதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சகரான்பூர் சென்றுள்ளார். இது அவருக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள மற்றொரு வாய்ப்பாக மட்டுமே இருக்கும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து