முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகவானை அடைய பக்தி மார்க்கம்தான் ஒரே வழி: திருப்பதி சின்ன ஜீயர் சுவாமிகள் ஆசியுரை

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

பகவானை அடைய பக்தி மார்க்கம்தான் ஒரே வழி என்று நெல்லையில் திருலை திருப்பதி ஸ்ரீ ஸ்ரீ கோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

நெல்லைக்கு வருகை

நெல்லைக்கு நேற்று காலையில் திருமலை திருப்பதி ஸ்ரீ ஸ்ரீ கோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் வருகை தந்தார். தொடர்ந்து தச்சநல்லுார் வடக்கு பைபாஸ் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு சுவாமிகள் ஆசி வழங்கினார். ஆசியுரையில் அவர் பேசியதாவது:

பக்தி மார்க்கமே வழி

பகவான் நாமத்தை எப்போதும் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். இறைவன் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் இருக்கிறார். எந்த வகையிலாவது பக்தர்களுக்கு பகவான் உதவி செய்வார். பகவானை அடைய பக்தி மார்க்கம்தான் ஒரே வழி. ஏழைகளுக்கு உதவி செய்வதின் மூலம் இறைவனை காணலாம். அனைத்து வகைகளிலும் ஏதாவது பலனை பக்தர்களுக்கு பகவான் வழங்கி வருகிறார். எனவே, இறைவனை பிரார்த்திப்போம். ஏழைகளுக்கு உதவி செய்வோம். அனைவருக்கும் நன்மைகள் உண்டாக இறைவன் நமக்கு அருள்புரிவார்.இவ்வாறு ஆசியுரை வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இதில் எம்.எல்.ஏ லட்சுமணன், மதுரை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன்,  கோவில்பட்டி அர்ச்சகர் ராகவன் சுவாமிகள், ராஜகோபால், மூர்த்தி, கோபி என்ற நமசிவாயம், வள்ளிநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, நெல்லைக்கு வந்த திருப்பதி சின்ன ஜீயர் சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டத

அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

தொடர்ந்து இன்று காலையில் கோவில்பட்டி சுபா நகர் நியூ டவுன் பத்மாவதி சமேத திருவேங்கடமுடையான் சந்நிதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ நித்ய கல்யாண வேங்கடேஷ்வர பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷன விழாவில் சின்ன ஜீயர் சுவாமிகள் கலந்து கொள்கிறார்.இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி தலைமை வகிக்கின்றனர்.ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை தலைவர் கனகராஜ், அறக்கட்டளை உறுப்பினர் சங்கரராஜ், அர்ச்சகர் ராகவன் சுவாமிகள் உட்பட பலர் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து