முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே வீரசின்னம்பட்டியில் ஜல்லிக்கட்டு – 18 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,-  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி வீரசின்னம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ கோட்டை    கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி,அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 431 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிகட்டில்   மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிகட்டிற்கு அனுமதிக்கப்பட்டன. கிட்டியிலிருந்து சீறிபாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடிவீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிகாசு,கட்டில், சைக்கிள், அண்டா, ஆட்டுகுட்டி, செல்போன்  உள்ளிட்டவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டது. இதில் 10 மாடுபிடி வீரர்கள் மற்றும் 8 பார்வையளார்கள் காயமடைந்தனர். மருத்து குழுவினர் முதல் உதவி செய்யபட்டது. பின் பலத்த காயடைந்த 2 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மேல் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர். இந்த ஜல்லிகட்டில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து