எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.- மானாவாரி சாகுபடியினை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு “நீடித்த மானாவாரி சாகுபடி இயக்கம்” என்ற திட்டத்தை 2016-17 முதல் 2019-20 வரை 4 ஆண்டுகளில் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் தலா 1000 ஹெக்டேர் பரப்பு கொண்ட 8 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக நடப்பாண்டில் 8 தொகுப்புகளில் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் நுழைவு கட்டப் பணிகள், கோடை உழவு, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
நுழைவுக் கட்டப் பணிகள்
மானாவாரி நிலங்களில் நுழைவு கட்ட செயல்பாடுகளாக தேர்வு செய்யப்பட்ட மானாவாரி நிலத்தொகுப்பில் அதற்கான மேம்பாட்டுக்குழு மற்றும் விவசாயிகளின் ஆலோசனைகளின்படி, தடுப்பணைகள், கிராம குளங்கள் போன்ற மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அமைக்கப்படும். ஒவ்வொரு தொகுப்பிலும் ரூ.5.00 இலட்சம் மதிப்பிலான மழை நீர் சேமிப்பு கட்டடைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மானாவாரி நிலத்தொகுப்புகளில் கோடை உழவுப் பணிகள்
வறட்சி காரணமாக மேல் மண் இறுகியிருக்கும் நிலையில், ஐந்து கொத்து கொழுக்கலப்பை மூலம் முகடும் வாய்க்;காலுமான முறையில் உழவு செய்யப்பட்டு, கோடை மழையை அதிக அளவில் வயல்களில் தேக்கி மண்ணின் ஈரப்பதத்;தை அதிகரித்து, நிலத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும். மேலும் கோடை உழவின் மூலம்; களைகளும், மண்ணில் உள்ள தீமை செய்யும் புழுக்களும், புழுக்களின் முட்டைகளும் பெருமளவில் அழிக்கப்படுகிறது. மானாவாரி தொகுப்பு நிலங்களில் உழவுப்பணி மேற்கொள்ள ஹெக்டேருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.1250.00 வீதம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட மானாவாரி நிலத்தொகுப்பில் உள்ள விவசாயிகள் சிட்டா, அல்லது நில ஆவணங்களுடன் விண்ணப்பத்தை வெம்பக்கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் உரிய படிவத்தில் கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள உதவி செயற் பொறியாளர்(வே.பொ) அலுவலத்திலும் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி வட்டார விவசாயிகள் உரிய படிவத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர்(வே.பொ), விருதுநகர் அலுவலத்திலும் அளிக்க வேண்டும். விவசாயி, அவரது சொந்த செலவில் ஐந்து கொத்து கொழுக்கலப்பை மூலம் இயந்திர உழவு மேற்கொள்ள வேண்டும். உழவுப் பணியினைத் துறையின் அலுவலர்கள் முன்னிலையில் மேற்கொண்டு பணியை புகைப்படம் எடுத்தல் வேண்டும். உழவுப்பணி மேற்கொண்டதை உறுதி செய்து சம்மபந்தப்பட்ட உதவி பொறியாளர்கள் அல்லது இளநிலைப் பொறியாளர்கள் சான்று வழங்குவர். உழவுப்பணி மேற்கொள்ளப்பட்டதை தொடர்புடை விவாசயியும், துறையின் உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர் ஒப்புதல் சான்றிட்ட படிவம் பட்டியல் கேட்பாக கருதப்படும். இதனை வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்;;ட உதவி செயற் பொறியாளர் ஆய்வு செய்து உண்மைத்தன்மைக்கான சான்று வழங்கியபின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு மேம்பாட்டு குழுக்களின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் மானியம் பின்னேற்பாக செலுத்தப்படும்.
மானாவாரி நிலங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைத்தல்
இத்திட்டத்தின் கீழ் மானாவாரி நிலத்தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள் மூலம் விவசாயிகளை கலந்தாலோசித்து ஏதுவான இடங்களில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்பட்ட தொகுப்புகளில் உள்ள மானாவாரி நிலங்களில் தடுப்பணைகள், கசிவு நீர்; குட்டைகள் மற்றும் கிராம குளங்கள் போன்ற மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படவுள்ளன.
மேற்கண்ட கட்டமைப்புகளில் விவசாய நிலங்களிலிருந்து வழிந்தோடி வரும் மழை நீர் தாழ்வான பகுதியில் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீரை பெருக்கவும், மழைக்குறைவு காலங்களில் பயிர்களுக்கு உயிர்பாசனம் அளிக்கவும், கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் முடியும். ஓவ்வொரு தொகுப்பிலும் ரூ.7.50 இலட்சம் மதிப்பில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படவுள்ளது.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல்
பண்ணை இயந்திரங்களின் உபயோகத்தை அதிகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தொகுப்பிற்கும் தலா ஒரு வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திற்கும் ரூ.10.00 இலட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க அனுமதிக்கப்படும். இதில் ரூ.8.00 இலட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வாடகை மையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் குறைந்தது 8 விவசாயிகள் அடங்கிய விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் ஏற்படுத்தப்படும். மேற்படி குழுக்கள் அல்லது அமைப்புகள் தங்களின் சொந்த தேவைக்கு மட்டும் மேற்குறிப்பிட்ட வேளாண் இய்நதிரங்களையும், கருவிகளையும் வாடகையின் அளவு சந்தை நிலவரத்திற்கு குறைவாக நிர்ணயிக்க வேண்டும்.
எனவே, நீடித்த மானாவாரி சாகுபடிக்கான திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மேற்படி பணிகளை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.