முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் தேனி கலெக்டர்வெங்கடாசலம், வழங்கினார்

திங்கட்கிழமை, 29 மே 2017      தேனி
Image Unavailable

 தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (29.05.2017) இன்று மாவட்ட கலெக்டர்வெங்கடாசலம்,  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 172 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து, 15 பயனாளிகளுக்கு ரூ.1,42,702- மதிப்பிலான அரசின் நல்த்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
     இக்கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.1,19,000- மதிப்பிலான காசோலையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நலியுற்ற ஏழைப்பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.3,386- வீதம் ரூ.23,702- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.1,42,702- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்வெங்கடாசலம்,  வழங்கினார்.
      இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள்  மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்ச.தங்கவேல்  உதவி இயக்குநர் (கனிமம்)சாம்பசிவம்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி.ராஜராஜேஸ்வரி  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலி  தொழிலாளர் நல அலுவலர்ராஜ்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து