முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவிநாசி தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 29 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில், அவிநாசி தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   முன்னிலையில் தமிழக சட்ட மன்றப் பேரவைத் தலைவர்  ப.தனபால்  தலைமையில் நடைபெற்றது.

நிவாரணம்

அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகள் பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது, முதியோர் உதவித் தொகை வழங்குவது, பட்டா வழங்குவது, ஸ்மாட்கார்டு வழங்குவது, குடிமராமரத்துப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் மேலும்,  மத்திய அரசின் திட்டங்களான அனைவருக்கும் வீடுகள் திட்டம் கிராமின், பிரதான மந்திரி கிராம பதக் யோஜனா, தூய்மை பாரத இயக்கம், அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய நெடுஞ்சாலை , பிரதான மந்திரி பசல் பீமா யோஜனா, தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அம்ரூட் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் செயல்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள  பணிகள் குறித்தும்  துறை வாரியாக  அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

நடவடிக்கை

மேலும், பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலைவசதி, மின்சாரம்  போன்றவை தங்குதடையின்றி கிடைத்திடவும், அலுவலர்கள் துரிதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து