முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது

திங்கட்கிழமை, 29 மே 2017      நீலகிரி

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தனிப்படை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட கோடநாடுஎஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24_ந் தேதி அங்கு காவல் பணியில் இருந்த ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார்.  இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இக்கொலையில் ஈடுபட்டதாக திருச்சூரைச் சேர்ந்த சதீசன், திபு, சந்தோஷ்குமார், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜெம்சீர் அலி, மனோஜ் சமி, வாளையார் மனோஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கடைசி குற்றவாளியான கேரளா திருச்சூரைச் சேந்த குட்ட என்கிற ஜிஜின் என்பவரை கோத்தகிரி போலீசார் நேற்று கைது செய்தனர்.

9 பேர் கைது

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலைவழக்கில் இது வரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்ட நிலையில் மற்றொரு குற்றவாளி சயான் விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே கோடநாடு எஸ்டேடோ காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் ஈடுபட்டதாக கருதப்படும் 11 பேரும் சிக்கியுள்ளதால் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து