முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு பேரணி : மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 31 மே 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு தின பேரணியை மாநகராட்சி ஆணையர் ந. இரவிச்சந்திரன் நேற்று (31.05.2017) துவக்கிவைத்தார்கள்.

பேரணி

இப்பேரணியில் நகர் நல அலுவலர் டாக்டர். அல்லி, உதவி ஆணையர் ரெங்கராஜன்ஆகியோர் முன்னிலைவகித்தார்கள்.இந்த பேரணியில் மகளிர் சுய உதவிகுழுக்கள், துப்புரவு சிறப்பு பணியாளர்கள், அண்ணல் குழந்தை ஏசு நர்சிங் மாணவிகள், மாநகரட்சி பணியாளர்கள் என மொத்தம் 500 நபர்கள் கலந்துகொண்டு புகையிலையின் தீமைகளை குறித்த பதாகைகள் ஏந்தி கோசங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இப்பேரணி சத்திம் பஸ்ஸ்டாண்டு ,சிங்காரத்தோப்பு வழியாக மரக்கடையில் முடிவடைந்தது.

இப்பேரணியில் மாநகராட்சி சுகாதார ஆலுவளர்கள் நல்லுச்சாமி, கார்த்திகேயன், பரசுராமன், தலைவிருச்சான், இளங்கோவன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து