முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் (பொ) எஸ்.தனசேகரன் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 31 மே 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகப் பிரதான கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொ) எஸ்.தனசேகரன் தலைமையில் நேற்று (31.05.2017) நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இதுநாள் வரை 151.97மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது.வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1030 மெ.டன் யூரியா, 631 மெ.டன் டி..பி, 530 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 815 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் போதுமான அளவில் இருப்பில் உள்ளது.இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள்; வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் 12 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 2 மெ.டன் என கூடுதலாக 14 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 220 மெ.டன், கூட்டுறவுத் துறையில் 21 மெ.டன் மற்றும் தனியார்; கடைகளில் 2 மெ.டன் ஆக மொத்தம் 243 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.

பாசனத் திட்டம்

தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற் போல் வேளாண் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

சிறுஃகுறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசன கருவிகளை தங்களது வயல்களில் நிர்மானித்துக்கொள்ள மானியம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. 75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதிப் பங்குத் தொகையை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறுஃகுறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த்துறையில் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சொந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல், வயல் வரைபடம் மற்றும் மின் இணைப்புடன் நீர் ஆதாரம் உள்ளமைக்கான சான்றுகளுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற இதர ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறுமாறு. மாவட்ட கலெக்டர் (பொ) எஸ்.தனசேகரன் தெரிவித்தார். இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து