முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் விழாவுக்கு வாங்கி வந்த பட்டாசுகள் வெடித்தது: 3 பேர் படுகாயம்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      திருநெல்வேலி

கடையநல்லூர் அருகே கோவில் விழாவுக்கு வாங்கி வந்த பட்டாசுகள் வெடித்ததில் தந்தை மற்றும் அவரது 2 மகன்கள் பலத்த காயம் அடைந்தனர்.

 கோவில் கொடை விழா

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது34). இவர் கோவில் விழா மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாணவெடிகள் மற்றும் நாட்டு பட்டாசு போடும் பணிகள் செய்து வந்தார். முத்துகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் கொடை விழா  செவ்வாயன்று  நடந்து வருகிறது.இதற்காக ஏராளமான நாட்டு பட்டாசுகளும், நாட்டு வாணவெடிகளும் வாங்கி தனது வீட்டில் வைத்து இருந்தார்.

பட்டாசு வெடித்தது

இந்த நிலையில் காலை திடீரென்று அவரது வீட்டில் இருந்து பட்டாசுகள் மொத்தமாக வெடித்து சிதறியது. இதில் அந்த அறையில் இருந்த சுப்பையா அவரது மகன்கள் ராஜா (7), ஜீவா (5) ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.அந்த வீடும் வெடி விபத்தில் பலத்த சேதம் அடைந்தது. வெடி சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர்களை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை-மகன்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

நாட்டு பட்டாசுகள் எப்படி வெடித்தன என்று காரணம் தெரியவில்லை. மொத்தமாக வாங்கி அழுத்தி கட்டி வைத்து இருந்ததால் வெப்பம் காரணமாக வெடித்ததா? அல்லது வீட்டில் சமையல் செய்யும் போது, தீப்பொறி பறந்து வெடி விபத்து ஏற்பட்டிருக்குமா என்றும் தெரியவில்லை.இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து