எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வைகாசி விசாகம் 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்து விதமான முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்ததாவது:
குடிதண்ணீர் வசதி
வைகாசி விசாகம் முன்னிட்டு 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்ப்பார்க்கபடுவதால் திருக்கோயிலுக்கு பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட குடிநீர் வழகால்வாரியம் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும், திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம் ஏற்பாடு செய்ய சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
மின்சார வசதி
திருக்கோயில் வளாகம், குரும்பூர் - குரங்கன் தட்டு நீரேற்று நிலையம், ஆத்தூர் நீரேற்று நிலையம் திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் தங்கு தடையின்றி மின்சார விநியோகம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.தொலைபேசி இணைப்புகள் முறையாக சரிவர இயங்க உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு
திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எவ்வித தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், திருச்செந்தூர் நகர் பகுதியில் சேரும் குப்பை கூழங்களை அவ்வப்போது அகற்றிட சிறப்பு நிலை பேரூராட்சி மூலமாக உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் திருக்கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்க திருச்செந்தூர் பொது சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும், திருக்கோயில் வளாகத்தில் வைகாசி விசாக திருவிழா முன்னிட்டு 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ சிகிச்சை வழங்கிட தயார் நிலையில் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
போக்குவரத்து வசதி
அரசு போக்குவரத்துறை மூலம் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்த உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டது, தென்னக ரயில்வே மூலம் 07.06.2017 வைகாசி விசாகத்திருநாளன்று சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
பாதுகாப்பு பணிகள்
தீயணைப்பு துறையினர் கடலில் பாதுகாப்பு வளையத்துடன், உயிர்மீட்பு படகுடனும் (லைப்போர்ட்டு) பாதுகாப்பு பணிபுரியவும் மற்றும் மீன்வளத் துறையினரை நீச்சல், கடலாள், முத்துகுழி பணியாளர்களுடன் பாதுகாப்பு பணிபுரியவும் உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். வைகாசி விசாகம் முன்னிட்டு 06-06-2017 முதல் 08-06-2017 முடிய மூன்று நாட்கள் தீயணைப்பு ஊர்தியில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், மருத்துவ ஊர்தியும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். திருக்கோயில் உட்பகுதிகள், வெளிபகுதிகள் மற்றும் இதர இடங்களில் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட காவல்துறையினரும், திருக்கோயில் வளாகங்கள் மற்றும் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் போக்குவரத்து காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
ஒத்துழைக்க வேண்டும்
வைகாசி விசாகம் முன்னிட்டு திருச்செந்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழுதடைந்துள்ள சாலைகளை பழுதுபார்த்து சரி செய்திடவும் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தெரு விளக்குகள் அனைத்தும் நன்கு இயங்கிட ஏற்பாடுகள் செய்திட வேண்டும். வைகாசி விசாகம் முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என்பதால் திருச்செந்தூர் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மற்றும் ஆடையார்குளத்திற்கு போதிய தண்ணீர் திறந்துவிட தாமிரபரணி கோட்டம் பொதுப்பணித்துறை பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பும் நல்கிட வேண்டும் என்று கூறினார்.
பலர் பங்கேற்பு
ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.இராஜையா, தூத்துக்குடி வட்டார போக்கு வரத்து அலுவலர் ரங்கநாதன், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் சமுத்திரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் வரதராஜன், நெடுஞ்சாலை துறை நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான் உள்ளிட்ட அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.