முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் 222 பயனாளிகளுக்கு ரூ. 82 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி வழங்கும் விழா: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் 222 பயனாளிகளுக்கு ரூ. 82 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி வழங்கும் விழா கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் 222 பயனாளிகளுக்கு ரூ. 82 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி இன்று (04.06.2017) வழங்கினார்.

நிதியுதவி வழங்கும் விழா

இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது :-புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இன்று (04.06.2017) படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் 222 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 222 ஓ 8 கிராம் ஸ்ரீ 1776 கிராம் தங்கமும் மற்றும் திருமணநிதியுதவியாக ரூ. 82 இலட்சத்து 75 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதில் 109 பேர் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பயனாளிகள் ஆவார்கள். இந்த சிறப்பு வாய்ந்த நலத் திட்ட உதவிகளை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2016-17ம் நிதியாண்டில் தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் 18,836 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் மொத்தம் 75,344 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ. 63,42,00,000ஃ- வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்கள் மட்டும் 6532 பயனாளிகள் ஆவார்கள்.

தற்போது 2017-18 நிதியாண்டில் இத்திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டின் 400 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் வீதம் மொத்தம் 3200 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ. 1,50,00,000ஃ- வழங்கப்படுகிறது. இதில் 200 நபர்கள் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பயனாளிகள் ஆவார்கள்.

பள்ளிகல்வித்துறைக்கு ரூ.26942 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமபுறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், 16 வகையான எழுது பொருட்கள், விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கப்பட்டு கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் புதியதாக சட்டக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதில் நடப்புக் கல்வியாண்டில் 3 ஆண்டு பிரிவில் 80 மாணவர்களும், 5 ஆண்டு பிரிவில் 80 மாணவர்களும் என மொத்தம் 160 மாணவர்கள் சட்டம் பயில புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு வாய்ப்பளித்துள்ளனர் மேலும் தருமபுரி மாவட்டத்திற்கென பெரியார் பல்களைகலக உறுப்பு கல்லூரி பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய இடங்களிலும் காரிமங்கலத்தில் அரசு மகளிர் கல்லூரியும், கடத்தூரில் பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் அனைவருக்கும் தரமான கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. எஸ். ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, பாலக்கோடு சர்க்கரை ஆலை தலைவர் கே. ரங்கநாதன், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, மத்திய கூட்டுறவு இயக்குநர் பொன்வேல், பால்வள துணை தலைவர் டி.கே. பெரியசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி. நிர்மலா கோவிந்தசாமி, கோபால், நல்லம்பள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிவபிரகாசம் உட்பட ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து