முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் நாளை தொழில்முனைவோர் முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடியில் வருகிற 6ம் தேதி ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், கலந்துகொள்ளலாம். தமிழக முதல்வர் அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மான்யங்களுடன் கூடிய கடனுதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் முயற்சி மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன,

 தொழில்முனைவோர் முகாம்

இதன் ஒரு பகுதியாக சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிய சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும் தொழில் மற்றும் வணிகத் துறையின் மாவட்ட தொழில் மையமும், தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கமும் இணைந்து 06.06.2017 அன்று ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் மேற்படி சங்க வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் / பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.

நிதி உதவிகள் பெற ஆலோசனை

முதற் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பறிச்சிமுகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர். அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

தொடர்புக்கு

தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மான்ய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். திட்டங்கள் மூலம் நிதி உதவி பெறும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர்’ திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். இப்பயிற்சிகளில் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இரா.வே. சுப்பிரமணியன், கைபேசி எண்: 87545490965 தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம்: - 0461-2347005, 9840158943 என்ற எண்ணில் தொர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து