முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு அமைப்பாளர்கள்- உதவியாளர்கள் பணியிடங்களுக்கு சான்றிதழ் சாரிபார்க்கும் பணியை கலெக்டர் நடராஜன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணியை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
      ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளை, மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 126 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் மற்றும் 163  சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பிட 09.03.2017 முதல் 23.03.2017 வரை அந்தந்த ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பம் பெறப்பட்டது.
 மனுதாரர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, காலிப்பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி வாரியாக வரும்  10.06.2017 வரையிலான 5 நாட்கள் மாவட்ட கலெக்டர்  அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட பயிற்சி கூட்ட அரங்கில் நடைபெறுகின்றது. பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களை தெரிவு செய்து, சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு 4ஆயிரத்து 601 நபர்களுக்கும், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆயிரத்து 575 நபர்களுக்கும் முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை அனுப்பப்பட்டது. சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளுக்காக மாhவட்ட மகளிர் திட்ட அலுவலக கூட்டரங்கில் 15 மேஜைகளும், ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு துணை வட்டாட்சியர் நிலை அலுவலர், ஒரு உதவியாளர் வீதம் 30 அலுவலர்களும், சான்றிதழ் சரிபார்ப்பு  அலுவலர்களாக துணை ஆட்சியர், வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் 7 நபர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் நகராட்சி மற்றும் ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பணியிடங்களுக்கு செவ்வாய்க்கிழமையும், தினமும், பரமக்குடி நகராட்சி மற்றும் பரமக்குடி, மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பணியிடங்களுக்கு இன்று(7-ந் தேதி)-ம், நயினார்கோவில், போகலூர், முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பணியிடங்களுக்கு நாளை 8-ந் தேதியும், கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பணியிடங்களுக்கு வரும் 09.06.2017-ம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பணியிடங்களுக்கு வரும் 10.06.2017-ம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுகின்றன.
           இந்த நிகழ்வின் போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) கணபதி, (வளர்ச்சி) உமா மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவுலர் முருகானந்தம், பரமக்குடி நகர நில அளவைத் திட்ட அலுவலர் அமலோற்பவ ஜெயராணி உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து