முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீவரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் 05ம் தேதி தொடங்கியது. விழா யொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. கடந்த 05ம் தேதியன்று மாலையில் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிம்மவாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.

தரிசனம்

மிகவும் பிரசித்தி பெற்ற கருடசேவை உற்சவகம் நேற்று அதிகாலை 4 மணிக்கு துவங்கியது. இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தில் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு ராஜகோபால் தெரு, பிள்ளையார்பாளையம், பஸ் நிலையம், காமராஜர் வீதி வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கருடசேவை முன்னிட்டு வீதிகள் தோறும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் பாதுகாப்பு பணியிற்காக ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து