எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“மகனே! உன் அறிவை என்னென்பேன்! பெரியோர்கள் தேடிய உணவை உண்ணுதல் சிறந்த மகனுக்கு அழகாகாது என்று எண்ணுகின்றாயா? இவ்வளவு இளம் பருவத்திலேயே உனக்கு இத்தகைய அறிவா? நான் உயிரோடிருக்கும் வரை நீ உழைக்க வேண்டாம். நான் இறந்த பிறகு வேண்டுமானால் உன் விருப்பம் போல் செய். அதுவரை என் பாதுகாப்பிலேயே நீ வளர்ந்து வருவாயாக!” என்று ஆஞ்சநேயன் தாய் அஞ்சனை கூறினாள்.
இது கேட்ட மாருதி மிகப் பணிவுடன் தன் தாயிடம் கூறினான்; “அம்மா!‘தாய்சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை நான் அறிவேன். தங்களை எதிர்த்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம்! என்னைப் பெற்றெடுத்த தெய்வமே! தங்கள் மணிவயிற்றில் என்னைப் பலகால் சுமந்தீர்கள். பெறுதற்குரிய துன்பமுடன் என்னைப் பெற்றெடுத்தீர்கள். ஈயெறும்பு முதலியன என் மீது மொய்க்காமல் இரவு பகலாகப் பாதுகாத்தீர்கள்! நான் நோயால் வருந்தினால், எனக்காகத் தாங்கள் மருந்து உண்டீர்கள். சிறந்த காய்கனிகள் கிடைத்தால், அதைத் தாங்கள் உண்ணாமல் எனக்கே கொண்டு வந்து கொடுத்தீர்கள். இவ்வாறு என்னை அன்புடன் வளர்த்த தங்களுக்கு எத்தனைப் பிறவி எடுத்தால் கைம்மாறு செய்ய முடியும்? இனியும் நான் தங்களிடம் கடன்பட வேண்டுமா? தங்களுக்கு உதவி செய்ய எனக்கு வாய்ப்புத் தாருங்கள், தாயே!” என்று உள்ளம் உருகி வேண்டினான். இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அஞ்சனையின் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகியது. இப்படிப்பட்ட நன்மகனைப் பெற்றதை எண்ணி இறும்பூதெய்தினாள். குழந்தையைத் தழுவி அணைத்தாள்; உச்சி மோந்தாள்; ஆனந்தக் கண்ணீர் பெருகச் சில சொற்களைச் சொல்லலானாள்:
“மகனே! நான் உன்னைப் பெற்றதனால் பெரும் பாக்கியவதி ஆகிவிட்டேனடா! புல மக்களை நான் பெற்று மகிழ்வதைவிட, உன் ஒருவனால் மட்டுமே என்னால் பேரின்பம் எய்த முடியும். என் பிள்ளைச் செல்வமே! பிறவிதோறும் நீயே மகனாக வரவேண்டும் என்று இறைவனை நான் வேண்டிக்கொள்ளப் போகிறேன்,’ என்று அஞ்சனை தன் மகனைப் பாராட்டினாள். மேலும் கூறலானாள்:
கண்ணே! உன் எண்ணம் போலவே இனி உழைத்துச் சாப்பிடுவாயாக! இந்த மலைச்சாரலில் காணும் மரஞ்செடி கொடிகளைப் பார்! இவற்றில் கிடைக்கும் சிறந்த காய்களையும், கனிகளையும், நாம் உணவாகக் கொள்ளலாம். எதிரே தோன்றும் காடுகளையும், மலையுச்சிகளையும் பார்! அங்கெல்லாம் செல்லாதே! அவை துன்பந் தரும் வழிகளையுடையவை. உயர்ந்த மரங்களில் ஏறாதே! மலைச்சாரலை விட்டு மலையுச்சிக்குச் செல்லாதே! சிகரங்கள் உயரமானவை. அவற்றின் மேல் ஏறிக் கைகால்களை உடைத்துக்கொள்ளாதே! நான் செல்லும் இடங்கள் தோறும் என்னுடனே சில நாள் வந்து பார்! நான் எவற்றை உண்கின்றேனோ அவற்றையெல்லாம் நன்றாகக் கவனித்து வா! காய், கனி, கிழங்குகளில் நல்லனவும் உள் தீயனவும் உள. தேர்ந்து உண்ணல் வேண்டும். ஆராயாது உண்டால் உயிருக்கே ஆபத்தாய் முடிந்தாலும் முடியும்,” என்று உண்ணற்குரிய பொருள்களையும், பெற வேண்டிய இடத்தினையும், தேர்ந்து கொள்ள வேண்டிய முறையினையும் நன்கு விளக்கினாள், அஞ்சனை. இவ்வாறு, சில நாட்கள் அஞ்சனையின் சொற்கேட்டு அதன்படி மாருதியும் அன்னையுடன் வாழ்ந்து வரலானான். ஒருநாள், தன் தாயைப் பிரிந்து மாருதி மட்டும் தனித்துச் சோலையுள் புகுந்தான். அப்பொழுது, அஞ்சனை உறங்கிக் கொண்டிருந்தாள். மாருதி சோலையினை ஒரு வலம் வந்தான். பின்னர் திடீரெனக் கிழக்கே நோக்கினான். கீழ்வானில் தகதகவெனும் சூரியனைக் கண்டான். அதனையும் ஒரு கனியெனவே தன் மனத்துட்கொண்டான். அதனைப் பறித்துண்ணக் கருதி அதனை நோக்கிப் பாயலானான்.
இவன் பாய்ந்த வேகத்தில் சோலைகளில் இருந்த மரஞ்செடி, கொடிகளும், மலைகளும,; திசைகளும் சுழன்றன. இவன் ஆற்றல் கண்டு தேவர் மூவரும் கூடத் திகைத்து நின்றனர்.
மாருதி சென்று கொண்டே இருந்தான். சூரிய மண்டலத்தை நெருங்கலானான். மாருதி செல்லுவதை இராகு என்னும் கோள் கண்டுவிட்டான். “சூரியனைப் பற்றும் உரிமை எனக்கு மட்டுமே இதுவரை இருந்து வந்துள்ளது. எனக்குப் போட்டியாக யாரோ ஒருவன் அச்சமின்றிப் பகலவனை நோக்கிச் செல்கின்றானே! சூரியனும் அவனைக் காய்ந்து கொல்லவில்லையே! குளிர்ந்த கிரணங்களையன்றோ அவன் மேல் வீசுகின்றான்! இது என்ன விந்தை!” என்று எண்ணியவனாய்த் தன் குறையைத் தேவர் தலைவனாகிய இந்திரனிடம் எடுத்துக் கூறினான். “ நீ போய்ச் சூரியனை விரைவில் பற்றிக்கொள். நான் தொடர்ந்து வந்து நடக்க வேண்டியவற்றைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று இராகுவுக்குக் கூறி அனுப்பினான் இந்திரன். இதற்குள், மாருதி சூரிய மண்டலத்தை நெருங்கலானான். மாருதியையும் விஞ்சி இராகு விரைந்து பறந்தான். மாருதி இராகுவைக் கண்டுவிட்டான். சூரியன் மேல் பாய்வதை விட்டு, மாருதி இராகுவின் மேல் பாயலானான். பயந்து நடுங்கிப் போன இராகு, இந்திரனிடமே சென்று சேரலானான். இராகு பயந்து வருதலைக் கண்ட இந்திரன், மாருதி மேல் சினம் கொண்டான். மாருதியை மாய்த்து வருமாறு வெள்ளை யானையை ஏவினான். வெள்ளை யானையையும் ஒரு கனியெனவே கருதினான் மாருதி. குழந்தைகட்குத் தேள்கூட உணவுப் பொருளாகத் தோன்றுதல் இயற்கைதானே!
வெள்ளை யானையைப் பற்றக் கருதி அதன் மேல் மாருதி பாய்தலைக் கண்டு தேவர்கோன் வெகுண்டான். தன் கையிலிருந்த வச்சிரப் படையை எடுத்தான். ஆஞ்சநேயனை நோக்கி வீசினான். குலிசம் என்னும் வச்சிரப்படை தாக்கியதால் மாருதி மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தான். தன் மகன் தரை மேல் வந்து விழுந்ததை வாயுபகவான் கண்டான். உணர்விழந்த தன் மகன் நிலைகண்டு உள்ளம் வெதும்பினான். பெற்ற வயிறு பற்றி எரிந்தது. தன் மைந்தன் நிலையைக் காணச் சகியாதவனாய்க் கண்ணீர் விட்டுப் புலம்பினான். குழந்தைப் பாசத்தைக் கடவுளாலும் கடக்க முடியாது என்பது எவ்வளவு உண்மை! வாயுதேவன் தன் மகனைத் தோள்மேல் போட்டுக் கொண்டு மலைக்குகை ஒன்றின் உள்ளே சென்றுவிட்டான். காற்றளித்து உலகைக் காக்கும் தன் கடமையை மறந்தான். புத்திரன் நிலைகண்டு புலம்பிக் கொண்டிருந்தான்.
வாயு தன் கடமையைச் செய்யாததால் காற்று என்பதே எங்கும் இல்லை. உயிரினங்கள் மூச்சுவிட முடியாமல் திக்குமுக்காடின. தேவர்களும், காற்றில்லாமையால் உடல் பருத்து, நடக்கவும் நாதியற்று மரங்களைப் போல் நின்றனர். பாம்பு உருவமுடைய நாகர்கள் துவண்டு வீழ்ந்து கிடந்தனர். எல்லா உலகங்களும் காற்றின்மையால் படும் துன்பத்தைப் படைக்கும் கடவுளாகிய பிரமன் கண்டான். வாயுதேவன் இருக்குமிடந்தேடி வந்தான். காற்றின் வேந்தனைக் கண்டு ஆறுதல் மொழிகள் கூறலானான். பின்னர் மாருதியைத் தன் மலர்க்கரங்களால் தடவிக்கொடுத்தான். பிரமன் கைபட்ட அளவில், தூங்கி எழுந்தவனைப் போல, மாருதியும் எழுந்து நின்றான். தன் மகன் விழித்தெழுந்ததைக் கண்ட வாயுதேவன், குகைக்கு வெளியே வந்து உலவலானான். உயிரினங்களும், தேவர்களும், நாகர்களும் வாயுவின் உலவலால் பழைய நிலை பெற்றனர். வாயுதேவனைப் போற்றுவதற்காக, அவன் இருக்கும் இடம் தேடி, வருணன், இயமன், குபேரன், உருத்திரன் முதலான தேவர்கள் வந்து கூடிவிட்டனர்.
வாயு பெற்றெடுத்த ஆஞ்சநேயனைக் கண்டனர். அனைவரும் வாயுதேவன் மனம் மகிழுமாறு, ஆஞ்சநேயனுக்கு வரங்கள் பல தந்து வாழ்த்தினர். அதனோடு, தங்கள் படைகளால் எந்தக் காலத்தும் ஆஞ்சநேயனுக்கு அழிவு வராது என்று உறுதியும், வரங்களும் அளித்து விடை பெற்றுச் சென்றனர். பிரமன் முதலிய தேவர்கள்” அனைவரும் சென்ற பின்னர் சூரியன் வந்தான். “வாயுவின் மைந்தா! எனக்குள்ள ஒளியில் நூற்றில் ஒரு பங்கினை நீ பெறுவாயாக! எப்படிப்பட்டவரும் என் அருகே வர அஞ்சுவர். நீயோ, என்னைப்பற்றி உண்ணுவதற்காகவே என்னை நோக்கி வந்தாய்! நானும் உன் வீரவிளையாட்டை ரசிக்கவே உன்னைக் காய்ந்து கொல்லவில்லை. நிகரற்ற வீரனாக நீ நிலவுவாயாக! உன்னை இனி யாராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது” என்று வாழ்த்திச் சென்றான். பின்னர் இந்திரன் வந்தான். தான் ஏறி வந்த வெள்ளை யானையிலிருந்து கீழே இறங்கினான். மாருதியின் கன்னத்தைத் தடவிக் கொடுத்தான். தன் குலிசப்படை மாருதியின் கன்னத்தைத் தாக்கி வற்றச் செய்து விட்டதைக் கண்டான். வற்றிய கன்னம் நீண்டு விளங்குதலையும் கண்டு வருந்தினான். வருத்தம் தீர வரங்கள் பல தந்து வாழ்த்தினான். “இனி உனக்கு ஹனுமன் (வற்றிய கன்னமுடையவன்) என்ற பெயரே நிலவுவதாக!” என்று கூறி விடை பெற்றுச் சென்றான். அன்று முதல் ஆஞ்சநேயன்,‘அனுமன்’ எனப் பலராலும் அழைக்கப்படலானான்!
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.