முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலாடி அருகே மாட்டுவண்டி பந்தயம்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 கடலாடி-   கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் முருகன் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
   கடலாடி தாலுகாவைச்சேர்ந்த ஆப்பனூர்  சுப்பிரமணியர் ஆலயத்தில் முருகன் கோவில் உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் நாடக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
  நேற்று காலை 7 மணியளவில் ஆப்பனூர் கிராமத்தில் இருந்து முனியன்கோவில் விலக்கு எல்கை வரை பெரிய மாட்டு வண்டி பந்தயமும்.
 ஆப்பனூர் இருந்து ஒருவானேந்தல்  கிராமம் வரை சின்ன மாட்டுவண்டிப்பந்தயமும் நடைபெற்றது.
  பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7மாட்டு வண்டிகள் கலந்துகொண்டனர். இதில் தூத்துக்குடி துரைச்சாமிபுரம் சுரேஸ்குமார் மாட்டுவண்டி முதல் பரிசு 15000 - திருநெல்வேலி மருதாலக்குறிச்சி சுப்பன் மாட்டுவண்டி  இரண்டாவது பரிசு 13000- திருநெல்வேலி வேலாங்குளம் கண்ணன் மாட்டு வண்டி மூன்றாவது பரிசு 11000- த்தையும் பெற்றுள்ளனர்.
 சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 12 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டனர். இதில் கம்பத்துபட்டி சின்னராசு மாட்டுவண்டி முதல் பரிசு 11000-தூத்துக்குடி பட்டி செல்லையா மாட்டுவண்டி  இரண்டாவது பரிசு 9000-தூத்துக்குடி சிந்தலக்கரை சின்னராசு மாட்டுவண்டி மூன்றாம் பரிசு 8000 த்தையும் பெற்றுள்ளனர்.      மாட்டுவண்டி பந்தயத்தை சுற்றுவட்டார  கிராமமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து