எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர்களுடனான வளர்ச்சித்திட்டம் மற்றம் செயலாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , மாவட்ட கலெக்டர் கு.இராசமணி, , திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
விவசாயிகள் நலன்
ஆய்வுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதல்களின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலன் மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் விவசாய உற்பத்தயை இருமடங்கு, விவசாயிகளின் வருவாயை மூன்று மடங்கு என பெருக்கிடவும், விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் குறிக்கோளுடன் கடந்த 6 ஆண்டுகளில் அதாவது 2011-2012 முதல் 31.03.2017 வரையிலான காலத்தில் மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 58 இலட்சத்து 57 ஆயிரத்து 408 விவசாயிகளுக்கு ரூ.27,442.22 கோடி அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டள்ளது.
அதே போல், 2016-2017 முதல் 2020-2021 வரையிலான 5 ஆண்டுகளுக்கு பயிர்கடன் ரூபாய் 40 ஆயிரம் கோடி அளவில் வழங்க குறியீடுகள் நிர்ணயம் செய்யப்பட்டு, பயிர்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-2017 ஆம் ஆண்டில், வறட்சி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் 4227.98 கோடி அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சீரிய முயற்சியின் காரணமாக விளைந்த ஒரு மைல் கல் நடவடிக்கையாகும். நடப்பு ஆண்டில் (2017-2018) பயிர்கடன் வழங்க ரூபாய் 7 ஆயிரம் கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டு 31.05.32017 வரை 59 ஆயிரத்து 208 விவசாயிகளுக்கு ரூ.381.23 கோடி அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட உள்ளது.
திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில் மட்டும் 31.05.2017 வரை ரூ.11.06 கோடி அளவிற்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய மாவட்டங்களில் பயிர்கடன் வழங்குவது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் , விவசாயிகளுக்கு தேவையின் அடிப்படையிலும், சட்ட விதகள் மற்றும் தகுதிகளுக்குட்பட்டு, தாராளமாக பயிர்கடன் வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பயிர்கடன் வழங்க தேவைப்படும் கூடுதல் தொகை ஒதுக்கப்படும்.
திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்க உர இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டபோது, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய திருச்சிராப்பள்ளி மண்டல அளவில் 3361 மெட்ரிக்டன் மற்றும் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய அளவில் 9946 மெட்ரிக்டன் என மொத்தம் 13 ஆயிரத்து 307 மெட்ரிக்டன் அளவிற்கு யூரியா, பொட்டாஷ், கூட்டு உரம், பாமினி, 17:17:17 கலப்பு உரம் ஆகியவை இருப்பு உள்ளதையும் நான்கு மாவட்டங்களில் உள்ள 647 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 13 ஆயிரத்து 469 மெட்ரிக்டன் உர இருப்பு உள்ளது குறித்தும் ஆய்வு செய்த பின்னர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய உரங்கள் இருப்பு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பயிர்கடன்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பாமினி உர ஆலை தானியங்கி பொட்டலமிடும் இயந்திரம் பொருத்தப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர்கடன் தொகையிலிருந்து விவசாயிகள் சாகுபடி செலவினத்தை பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசு, வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூபே கடன் அட்டைகளும், விவசாயிகளுக்கு ரூபே விவசாய கடன் அட்டை திட்டத்தை செயல்படுத்த தெரிவித்ததன் அடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூபே கடன் அட்டை வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12.06.2017 அன்று துவக்கப்பட உள்ளது. இந்த அட்டையைக் கொண்டு தமிழக விவசாயிகள் இந்திய அளவில் எந்தவொரு ஏடிஎம் மையத்திலும் பணபரிவர்த்தனை மேற்கொள்ள இயலும்.
புரட்சித்தலைவி அம்மா 2016 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி 31.03.2016 அன்று கூட்டுறவு நிறுவனங்களில் நிலுவையிலிருந்த சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை தள்ளுபடி செய்ததன் மூலம் 12 இலட்சத்து 2 ஆயிரத்து 75 விவசாயிகள் ரூ.5280.25 கோடி தள்ளுபடியாக பெற்று பயனடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 986 விவசாயிகளுக்கு ரூ.819.70 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2015-2016ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. இத்தொகையினை உடனடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைத்து விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை 15 சதவீதம் வரை தள்ளுபடியில் பெற்று பயனடையும் வகையிலான 111 அம்மா மருந்தகங்கள் மற்றும் 187 கூட்டுறவு மருந்தகங்கள் என 298 மருந்தகங்கள் மூலம் 30.04.2017 வரை ரூ.497.25 கோடி அளவில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. திருச்சராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் 8 கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் 4 அம்மா மருந்தகங்கள் வாயிலாக ரூ.432.14 இலட்சம் அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.37.25 லட்சம் நுகர்வோர்களுக்கு தள்ளுபடி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் மருந்தகங்களின் சிறப்பான செயல்பாடுகளை ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் தேவைப்படும் இடங்களில் துவக்க மண்டல இணைப்பதிவாளர்களுக்கு ஆணையிட்டார்கள். இறுதியாக, துறை அலுவலர்கள், தங்களது கள ஆய்வு பணியினை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்கள். நலிவுற்ற கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த நிதி வழங்கவும், அரசு அறிவிப்பில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர் (மணப்பாறை), பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்), கூட்டுறவுசங்கங்களின் மாநிலமேலாண்மை இயக்குநர் அந்தோணிசாமிஜான்பீட்டர், இணைப்பதிவாளர்கள் ரவிச்சந்திரன், ஏகாம்பரம், காந்திநாதன், கே.ஜெயம், உமாமகேஸ்வரி, டி.ரமணிதேவி, மேலாண்மை இயக்குநர்கள் வானதி, மு.தனலட்சுமி, துணைப்பதிவாளர்கள் பாலசந்திரன், ராஜ்குமார், தீபாசங்கரி, மனோகரன், சித்ரா, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி;த்தலைவர் ராமு, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர்; பத்மநாபன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ஜெயபால், ஜெயக்குமார், செல்வம், வெங்கடாச்சலம், முன்னாள் கோட்டத்தலைவர் ஞானசேகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, ராஜா, மலைக்கோட்டை ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.