முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதம்பாக்கம் பகுதியில் செல்போன் திருடிய வாலிபர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      சென்னை

சென்னை, ஆதம்பாக்கம், பார்த்தசாரதி நகர் 6வது தெரு, எண்.1 என்ற முகவரியில் செல்வமணி, /57, /பெ.கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.

ஆஜர்

இவர் வீடு புரோக்கராக தொழில் செய்து வருகிறார். செல்வமணி நேற்றுமுன் தீனம் மதியம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக ஒருவர் மேற்படி செல்வமணியின் செல்போனை திருடிக்கொண்டு தப்ப முயன்றுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த செல்வமணி சுதாரித்துக்கொண்டு கூச்சலிட அருகிலிருந்த பொதுமக்கள் மேற்படி வாலிபரை மடக்கிப்பிடித்தனர். தகவலறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை பிடித்து காவல் நிலையம்அழைத்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட வாலிபரின் பெயர் வினோத், /19, /பெ.குமார், கக்கன் நகர் 3 வது தெரு, ஆதம்பாக்கம் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் குற்றவாளி வினோத் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ளது விசாரணையில் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட வினோத் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து