முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் தேர்வு கலெக்டர் வா.சம்பத்,ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      சேலம்
Image Unavailable

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் எழுத்தேர்வு மையத்தினை நேற்று (11.06.2017) கலெக்டர் வா.சம்பத், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சேலம் மாவட்டத்தில் இன்று 11.06.2017 நடைபெறும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் நிலை-4 தேர்வு சேலம் வட்டத்தில் உள்ள 5 கல்லூரிகளில் நடைபெறுகிறது. இன்று 11.06.2017 நடைபெறும் அலுவலர் நிலை – 4 தேர்வினை 4,784 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர் இன்றய தினம் 2,375 தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இன்று நடைபெற்ற நிலை -4 தேர்வினை கலெக்டர் ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த தேர்வினை கண்காணிக்க தலைமை கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணை கலெக்டர்கள் நிலையில் 28 முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்வு மையங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, சேலம் வட்டாட்சியர் லெனின் மாவட்ட தலைமை உதவியாளர்கள் பத்மா, கலைச்செல்வி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து