முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் அருகே மினி வேன் மோதி பெண்; பலி,

திங்கட்கிழமை, 12 ஜூன் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.ஜுன். ஒட்டன்சத்திரம் அருகே மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பலியானாhர் மற்றொருவர் கவலைக்கிடமாக மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, விருப்பாட்சியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 42) இவர் விருப்பாட்சி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். சித்ராவும், இவரது உறவினர் கிட்டான் (எ) கிரு~;ணன் (வயது 57) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மேற்கிலிருந்து கிழக்காக வந்துகொண்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையத்திலிருந்து பெரிய வெங்காயம் ஏற்றி வந்த மனிவேன் இடது ஓரமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை இடித்து பின்பு இருசக்;கர வாகனத்தில் சென்ற சித்ரா மற்றும் முருகன் மீது பின்புறமாக மோதியது. மின் வேன் மோதியதில் சித்ரா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இவரது உறவினர் கிட்டான் (எ) கிரு~;ணன் தலை பிளந்து, இடது கால் உடைந்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தகவல் அறிந்த சத்திரப்பட்டி காவல் ஆய்வாளர் அமுதா, சப் இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரையும் பின்புறம் மோதிய மினி வேன் மேட்டுப்பாளையம் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த சிபாஜெபகர்ணன் என்பவருக்கு சொந்தமானதாகும்.  இதன் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடன் தலைமறைவாகிவிட்டார். சித்ராவின் கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சித்ராவிற்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.  சத்திரப்பட்டி காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து