முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்ட பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 10 பயணனாளிகளுக்கு ரூ. 40,000 மதிப்பிலான கிருமிநாசினிகள் மற்றும் இடுபொருட்கள்: கலெக்டர் கே.விவேகானந்தன்,வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ. 1704- மதிப்பில் புழு வளர்ப்பு மனை கிருமிநாசினிகள் 12 எண்ணிக்கைகள்;, ரூ. 934- மதிப்பில் புழு வளர்ப்பு படுக்கை கிருமிநாசினிகள் - 24;, ரூ. 589- மதிப்பில் பிளிச்சிங் பவுடர் - 31 எண்ணிக்கைகள்;, ரூ. 769- மதிப்பில் இலைத் தெளிப்பான் - 6 எண்ணிக்கைகள் என ரூ. 4000- வீதம் பட்டு விவசாயிகளுக்கு (ஒரு பயனாளிக்கு ரூ. 4000- வீதம்) 10 பயனாளிகளுக்கு ரூ. 40,000- மதிப்பிலான கிருமிநாசினிகள் மற்றும் இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன்,வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரு. செந்தில்குமார், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஆ. இரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து