முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறையில்லாமல் இருப்பது மகிழ்ச்சி: மனுநீதிநாள் முகாமில் ஆர்டிஓ பேச்சு

புதன்கிழமை, 14 ஜூன் 2017      வேலூர்

 

இன்றைய முகாமில் உங்;களுக்கு குறையில்லை என காணும் பொழுது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று மனுநீதிநாள் முகாமில் பங்கேற்ற ஆர்டிஓ பேசினார். இது குறித்து விவரம் வருமாறு வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, அரிகலாபாடி ஊராட்சி கிராமத்தில் அரிகலாபடி, மாங்காட்டுசேரி மற்றும் பரமேஸ்வரமங்களம், ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடங்;கிய மனுநீதிநாள் முகாம் நேற்று நடைபெற்றது.

மனுநீதிநாள் முகாம்

இந்த மனுநீதிநாள் முகாமிற்கு வந்தவர்களை தாசில்தார் பாஸ்கர் வரவேற்று பேசினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ஜெயந்தி முன்னிலை வகித்தார். இராணிப்பேட்டை கோhட்டாச்சியர் இரா.ராஜலட்சுமி முகாமிற்கு தலைமை தாங்கி ஏழை எளிய 72 பயனாளி;களுக்கு நல உதவிகளை வழங்கி பேசினார்.

அவர் பேசிய போது. மனுநீதி நாள் முகாம் என்பது மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு கிராமத்தில் அதிகாரிகள் முகாமிட்டு உங்கள் குறைகளை நேரிடையாக கேட்டு தீர்த்து வைக்க நடத்தப்படுகிறது. இம்முகாமில் மொத்தம் 169 மனுக்கள் பெறப்பட்டன அவற்றில் இருளர் சான்று, குறு,சிறு விவசாயிகள் சான்று, வீட்டுமனை பட்டா என 72 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளபட்டன. விவசாயத்திற்காகவும், மன்பாண்டவர்களுக்காகவும், ஏன் சொந்த பன்பாட்டிற்காகவும் ஏரி வண்டமணல் தருகிறோம் யாரெல்லாம் பயனடைந்தீர்கள் என்றார் (யாரும் பதிலளிக்கவில்லை) மேலும், இந்த முகாமில் விவசாயிகள் எத்தனை பேர் பங்கேற்று உள்ளீர்கள் என்றும் கேள்வி எழுப்பிய போதும் யாரும் கை தூக்கவில்லை

உங்களுக்காக பல திட்டங்களை அரசு நிறைவேற்றி தருகிறது பயனடை யாரும் முன்வராதது ஆச்சரியத்தை அளிக்கிறது. எனவே, தயங்கால் கேளுங்கள் நிறைவேற்றி தர காத்திருக்கிறோம். கடுமையான வெப்பத்தால் சிரம படாமல் இருக்க அதிக தண்ணீரும், குளிhச்சி ;பானங்களான மோர், இளநீரையும் அதிகமாக குடியுங்கள் என்று அறிவுரை கூறினார். நிகழ்வுகளை கிராம அதிகாரி கவிஞர் தணிகாசலம் தொகுத்து வழங்கினார். கிராம அதிகாரிகள் நெடுஞ்செழியன், கலைவடிவன், ராஜேஷ், வேளாண்மை அலுவலர் பாருக், தோட்டகலை அலுவலர் பிரேமா, உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர் இறுதியில் வருவாய் ஆய்வாளர் சாந்தி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து