எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பாப்பணம் கிராமத்தில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில், வருவாய்த்துறையின் மூலமாக 50 பயனாளிகளுக்கு ண உதவித் தொகையினையும், 47 பயனாளிகளுக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையினையும், 4 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையினையும், 26 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், 1 பயனாளிக்கு சிறுகுறு விவசாயி சான்றிதழும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலமாக ஜந்து வயது நிறைவடைந்து தொடக்கக்கல்வி பயிலச் செல்லும் 5 அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலமாக 12 பயனாளிகளுக்கு ரூ.54,548 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், ஊரக வளர்ச்சித்துறை மூலமாக 2 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் முழுமானியத்துடன் 2 பயனாளிகளுக்கு ரூ.56,092 மதிப்பிலான மழைத்தூவான் கருவிகளும் என மொத்தம் ரூ.22,78,640 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது :-
மக்களை தேடி அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் வருவதற்கு காரணம், அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்;முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமினை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிராமங்களில் முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.
மேலும், இம்முகாம்களில் வருவாய்த்துறை மட்டுமல்லாது, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்;துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்ற பிற அரசுத்துறைகள் மூலமும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, கிராமத்தில் உள்ள இ-பொது சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள பொது இ-சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிதாக தொடங்கப்பட்ட மனுக்கள் பதிவு செய்யும் பிரிவிலும் தங்கள் மனுக்கள் தகுதியானதா என தெளிவாக தெரிந்து கொண்ட பின் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழக அரசு விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மென்மேலும் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் ஏரி,கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகளுக்கு வண்டல்மண்ஃசவுடுமண்; போன்ற கனிமங்களை இலவசமாக எடுத்து விநியோகம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆகையால் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களின் விவசாய நிலங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், இவ்வாறு ஏரி,கண்மாய் மற்றும் குளங்கள் தூர்;வாருவதன் மூலமாக பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை அதிகப்படியாக சேமிக்க முடியும் என்றும், மேலும் சேமிக்கப்படும் நீரினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்கிறது என்றும் தெரிவித்தார்கள்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, அனைத்து அலுவலர்களும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு செல்ல ஏதுவாக அரசு பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பேருந்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பயணம் செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டார்கள்.
மேலும், மக்கள் தொடர்பு திட்ட முகாமில் விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின்; அதிநவீன மின்னணு வாகனம் மூலம் அரசின் சாதனை விளக்க வீடியோ படக்காட்சியும் நடத்தப்பட்டது.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி.திலகவதி, தனித்துணை ஆட்சியர் (சா.ப.தி) முருகேசன், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) தி.உஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில் ஆறுமுகம், வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பார்த்திபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தி.விஜயாம்பிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நரசிம்மன், காரியாபட்டி வட்டாட்சியர் தி.மாரிசெல்வி, உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.