முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை விற்பனைத் தடை உத்தரவு விவகாரங்களை நேர்மையாக அணுகுவோம்: மத்திய அமைச்சர்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இறைச்சிகாக மாடுகளைச் சந்தைகளில் விற்கத் தடை விதித்து மத்திய அரசு விடுத்திருந்த அறிவிப்பாணை குறித்து மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 இந்நிலையில் தடை உத்தரவு விவகாரங்களை நேர்மையாக அணுகுவோம் என்று  மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  கூறியுள்ளார்,

இறைச்சிக்காக சந்தைகளில் கால்நடைகளை விற்க வாங்கவும் தடை விதிக்கப்பட்ட அறிவிப்பாணை குறித்த விவகாரங்களை ‘பொறுப்புடனும், நேர்மையுடனும்’ அணுகுவோம் என்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன். “உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஜூலை 11-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னரே நாங்கள் பதில் அனுப்பி விடுவோம்.

நாங்கள் ஏற்கெனவே கூறியபடி இது தொடர்பாக கவலை ஏற்பட்டுள்ளவர்களுக்கு பொறுப்புடனும், நேர்மையாகவும் பதில் அளிப்போம், இதனால் பாதிக்கப்பட்ட எந்த ஒருவரையும் அரசு சந்தித்துப் பேசும்” என்றார் ஹர்ஷ் வர்தன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து