முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னார்வ குருதி கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, 22 தன்னார்வ குருதி கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, இரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் இல.சுப்பிரமணியன்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

 பரிசோதனை

 பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போதும், தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், விபத்தினால் இரத்த இழப்பு ஏற்பட்டவர்களும், தீக்காயம் அடைந்தவர்களுக்கும், இரத்த சோகை உள்ளவர்களுக்கும், பிரசவ காலத்தில் ஏற்படும் இரத்த இழப்பிற்கும், இரத்த புற்றுநோய் தாக்கியவர்களுக்கும் உயிர்காக்கும் மருந்தாக இரத்தம் தேவைப்படுகிறது. தாமாக முன்வந்து இரத்த தானம் செய்வதால், மாரடைப்பு வருவது குறைக்கப்படுகிறது.  புதிய இரத்த அணுக்கள் உருவாக ஊக்குவிக்கப்படுகிறது.  இரத்த தானம் வழங்குவதால் ஒருவர் உடலில் 500 கலோரிக்கும் மேலாக எரிக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதற்கு முன்பாக உடல் எடை கணக்கிடப்படுகிறது.  குறைந்ததது 45 கிலோ இருக்க வேண்டும்.  18 வயதிலிருந்து 65க்குள் இருக்க வேண்டும். இரத்த வகை மற்றும் ஆர்.எச். பிரிவுப் பரிசோதனை செய்யப்படுகிறது.

ரத்ததானம் செய்யலாம்

நம் ஒவ்வொருவருடைய உடலிலும் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது.  இதில் இரத்த தானத்தின் போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லி லிட்டர் மட்டுமே.  நாம் தானம் செய்யும் இந்த 350 மில்லி லிட்டர் திரவம் 24 மணி நேரத்திற்குள்ளாக நமது உடலால் மீண்டும் ஈடு செய்யப்படும்.  ஹ{மோகுளோபின் அளவு 12.5 க்கு மேல் இருக்க வேண்டும்.  இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.  மூன்று மாதத்திற்கு ஒருமுறை தாராளமாக இரத்த தானம் செய்யலாம்.  இரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும்.  இரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். அரசு இரத்த வங்கிகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் இரத்த வங்கிகளில் மட்டுமே இரத்த தானம் செய்ய வேண்டும்.  அரசு இரத்த வங்கிகள் நடத்தும் இரத்த தான முகாம்களிலும், இரத்த தானம் முகாம் நடத்த அனுமதி பெற்ற தனியார் இரத்த வங்கிகள் நடத்தும் முகாம்களிலும் இரத்த தானம் செயலாம் என கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார். இப்பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, நான்குமுனை சாலையில் முடிவடைந்தது.  இப்பேரணியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் அலுவலர்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், தன்னார்வ குருதி கொடையாளர்கள், பொதுமக்கள் என சுமார் 400 நபர்கள் கலந்து கொண்டனர்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, இணை இயக்குநர் (மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள்) டாக்டர்.பெர்லின் நோபல் ரூபாவதி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள் (விழுப்புரம்), டாக்டர்.ஜெமினி (கள்ளக்குறிச்சி), துணை இயக்குநர் (காசநேர்) டாக்டர்.சுதாகரன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) (பொ) டாக்டர்.மணிமேகலை, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் துரைசாமி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.வனிதாமணி, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர்.இரவிசங்கர், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.மணிவண்ணன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து