முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.24 கோடி பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் திருப்பதி தேவஸ்தானம் தவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : ரூ.24 கோடி பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல்  திருப்பதி தேவஸ்தானம் தவித்து வருகிறது. புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகள் ஜனவரி 1-ம் தேதி முதல் முற்றிலுமாக புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்டது.

இதனை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாத மக்கள் கோயில் உண்டியல்களில் செலுத்தத் தொடங்கினர். இந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் ரூ. 24 கோடி பழைய நோட்டுகள் காணிக்கை வந்தது.


இந்த நோட்டுகளை மாற்றித் தரும்படி ரிசர்வ் வங்கிக்கு திருப்பதி தேவஸ்தானம் பல முறை கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை. இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளரிடம் சமீபத்தில் பேசியுள்ளதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து