எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் பத்து இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்,
தமிழக சட்டசபையில் உணவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் காமராஜ் பேசினார், அப்போது அவர் பேசியதாவது: .
நடப்பு நிதியாண்டில் டெல்டா மாவட்டங்களில் 25 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தலா 40 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ 10 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும்.. காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் நெல் அதிகபட்ச மழைமற்றும் பனிப்பொழிவிற்கு இலக்காகிறது. இதனால் நெல்லின் ஈரப்பதம், கொள்முதல்செய்வதற்கேற்ற அளவைவிடக் கூடுதலாக இருக்கிறது. எனவே, அறுவடையாகும்நெல்லை உலர்த்த ஏதுவாக ஏற்கனவே சொந்தக் கட்டிடங்களில் செயல்படும் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களின் காலி இடத்தில் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ., 5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 50 நெல் உலர்த்தும்களங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 33 மண்டலங்களில்மொத்தம் 221 எண்ணிக்கையிலான சொந்த கிடங்கு வளாகங்கள் அமைந்துள்ளன.அவற்றில் பிரதான சாலை அருகில் அமைந்துள்ள 10 இடங்களான சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னை மாவட்டம் நந்தனம்,தஞ்சாவூர் மாவட்டம் இரும்புத்தலை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவாரூர்மாவட்டம் சுந்தரக்கோட்டை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, நாகப்பட்டினம்மாவட்டம் கோயில்பத்து, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர்மற்றும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் பொதுமக்களின்பயன்பாட்டுத் தேவையினை கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய்நிறுவனங்களுடன் இணைந்து “அம்மா பெட்ரோல் பங்க்” தொடங்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர்நிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 1948ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலிசட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி ரூபாய் 2,450/-லிருந்து ரூபாய்2,995/- ஆக 01.04.2014 முதல் உயர்த்தி வழங்க உள்ளது. இதன் மூலம் 4,460 பருவகால பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு இரண்டு கோடியே எழுபத்தி இரண்டு லட்சம்கூடுதல் செலவாகும். சேமிப்புகிடங்குகளில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்படும் பொருட்கள்தரமானதாகவும் உரிய எடையுடன் கூடியதாக உள்ளதா என்பதை உறுதி செய்யும்வகையில் பட்டை குறியீடுமுறை அறிமுகப்படுத்தப்படும்பொருட்டுதனித்தன்மை வாய்ந்த அடையாள எண் வழங்கும் இயந்திரங்கள், ஸ்கேன் செய்யும்இயந்திரங்கள் மற்றும் அதற்கு உண்டான மென்பொருள் உள்ளிட்ட மொத்தம் 1762பட்டை குறியீடு இயந்திரங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய உள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் இயங்கிவரும் நேரடி நெல் கொள்முதல்நிலையங்கள் மூலம் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லினை தூற்றி சுத்தம்செய்து தரமான நெல் கொள்முதல் செய்வதற்கு கூடுதலாக 200 நெல் தூற்றும்இயந்திரங்கள் ரூபாய் ஐம்பது லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள தராசுகளுக்கு மாற்றாகவும்,குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான எடை அளவில்விநியோகம் செய்வதற்காகவும் கூடுதலாக 60 கிலோ திறன் கொண்ட 625மின்னணு எடைமேஜை தராசுகள் ரூபாய்ஐம்பது இலட்சம் செலவில் கொள்முதல் செய்ய உள்ளது.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தில் முழு கணினிமயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. முழு கணினிமயமாக்கல்தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் அனைத்துமுதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்கள் மற்றும் தலைமைஅலுவலகத்தில் பணிபுரியும் அலகு அலுவலர்கள் ஆகியோருக்கு 51மடிக்கணினிகள் ரூ 50 லட்சம் செலவில் வழங்க உள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களின்செயல் திறனை மேம்படுத்த 500 பணியாளர்களுக்கு நவீன முறையில்தொடர் விநியோகப் பயிற்சி, தர கட்டுப்பாடு பணிகள், அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி, நவீன அரிசி ஆலை, சேமிப்புகளம், கிடங்குகள்ஆகியவற்றுக்கான சிறப்பு மேலாண்மைப் பயிற்சி ரூ.50 லட்சம் செலவில்வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.