எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , ''தமிழ்நாடு மின்சார வாரியம் விவசாயத்திற்கு முற்றிலும் இலவசமாக மின்சாரம் வழங்குவதற்கும், சுயநிதி திட்டம் மூலம் முன்பணமாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் செலுத்துபவர்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரையில் மட்டுமே முற்றிலும் இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தின் படி மின் இணைப்பு வழங்கப்பட்டது.
அதே போல ரூபாய். 25 ஆயிரம் முன்பணம் செலுத்தி விண்ணப்பித்தவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு வரையும், ரூபாய். 50 ஆயிரம் முன்பணம் செலுத்தி 2011 ஆம் ஆண்டு வரை விண்ணப்பித்தவர்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 16 ஆயிரம் பேர் மின் இணைப்புக்காக இன்னும் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இச்சூழலில் மின் இணைப்பு கிடைக்காத 3 லட்சம் விவசாயிகள் டீசல் இன்ஜினை (மோட்டர் இயந்திரம்) பயன்படுத்தி பாசனம் செய்வதால் அதிக செலவாகிறது. கடந்த 15 முதல் 20 வருடங்களாக பாசனத்திற்கு இலவச மின்சாரம் கிடைக்காமல் காத்திருப்பதும், பாதிப்பதும் விவசாயிகள்தான். மேலும் டீசல் இன்ஜின் மூலம் ஆழ்குழாய் கிணறுகளில் சுமார் 50 அடி ஆழத்திற்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்க முடியாத சூழலில் விவசாயிகள் கடன் வாங்கி, சுமார் 2 லட்சம் செலவு செய்து ஜெனரேட்டர் வாங்கி, அதன் மூலம் ஆழ்குழாய் கிண்றுகளில் மின் மோட்டாரை பொருத்தி தண்ணீர் இறைத்து பாசனம் செய்கின்றனர்.
ஜெனரேட்டரை இயக்குவதற்கு அதிக அளவில் டீசல் தேவைப்படுவதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முழுமையான மின்கட்டணம் செலுத்தி மலர் சாகுபடி செய்வதற்கு டேரிப் - III A ல் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாகியும் இன்னும் மின் இணைப்பு கிடைக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.
தமிழகத்தில் குறிப்பாக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலுக்கு மின் இணைப்புக் கிடைக்காமல், இலவச மின்சாரம் கிடைக்காமல், தடையற்ற மும்முனை மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் விவசாயத்தொழிலுக்கு முன்னுரிமைக் கொடுத்து, திட்டங்களை செயல்படுத்தி, தொடர் நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும், விவசாயத்தை நம்பி வாழ்கின்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.
எனவே இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கும், முன்பணம் செலுத்தியவர்களுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருப்போர்களுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் மற்றும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.