எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு தொழில்நெறி முறை வழிகாட்டி புத்தகங்களை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களும் வெளியிட்டார்கள்!!
நியமன ஆணை
வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களும் +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் தொழில் வழிகாட்டி பயிற்சி முகாமை துவக்கி வைத்து 60 நபர்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் திறன் பயிற்சி சேர்க்கை, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் கையேடுகளை வெளியிட்டு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற 30 நபர்களுக்கு வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில் பணிபுரிய பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை என்.சுப்பையன், இ.ஆ.ப., திட்ட விளக்கவுரையாற்றினார்கள்.இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன்.இ.ஆ.ப., தலைமை வகித்தார்கள்.
விழாவில் வணிவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசியதாவது.மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழகத்தில் படித்த +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் இளைஞர்களுக்கு தொழில் வழகாட்டி நிகழ்ச்சி மற்றும் அம்மா இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் திறன் பயிற்சி சேர்க்கை இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் எதிர்கால இளைஞர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அளிக்கும் வகையில் அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு துறையின் கீழ் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். முகாமில் தேர்வாகதவர்களுக்கு அவர்களின் குறைகளை களைந்து மீண்டும் வெற்றி பெற தமிழக அரசு திறன் பயிற்சி மையத்தை ஒன்றையும் அமைத்து அவர்களுக்கு உதவிகளை புரிந்து வருகிறது. ஆகவே இந்த முகாமில் ஆலோசகர்கள் அளித்த அத்துணை ஆலோசனைகளையும் இளைஞர்கள் பெற்று தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட அரசாக என்னென்றும் உறுதுணையாக இருக்கும் என்று வணிவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசினார்.
விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது.
மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் இளைஞர்கள் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுவதன் மூலம் வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பினை பெற வேண்டும் இதன் மூலம் அவர்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ள வேண்டும் என்பதே தமிழக அரசின் உயரிய நோக்கமாகும். தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய குடுப்பத்தைச் சார்ந்த மாணவ மாணவியர் பயிற்சி பெறுவதற்காகவும் தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் தொழிற்சாலைகளில் தொழிலாளர் தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றிக்கு இடையேயுள்ள இடைவெளியை பூர்த்தி செய்திடவும் இளைஞர்கள் சுய தொழில் துவங்க உதவிகள் புரிந்திடும் வகையில் முதற்கட்டமாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொன்றிலும் 20 நபர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் அம்மா இருசக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி மையம் 1.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகன பழுதுபாhப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி மையம் ரூ 4 இலட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 60 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 60 நபர்கள் என்ற விதத்தில் 3600 பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கிடும் வகையில் ரூ2.94 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்திட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வங்கி நிதி மற்றும் காப்பீடு போன்ற சேவைத்துறைகள் தொடர்பான பணிகளுக்கான திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் இளைஞகர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ18 இலட்சம் செலவில் வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் இன்று முதன் முதலாக வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்படுகிறது. தேர்வு செய்;யப்பட்ட இளைஞர்களுக்கு அந்த நிறுவனத்தின் கல்லூரியில் சம்பளம் மற்றும் தங்கும் வசதியுடன் ஓராண்டு கணினிபயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணி உடனடியாக வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இலவசமாக உயர்கல்வியையும் படிக்க வழிவகையையும் செய்துள்ளது. இது போன்று ஏழை எளிய மாணவ மாணவியர் பயன்பெற அரசு பல்வேறு தொழிற்நிறுவனத்தில் படித்த மாணவகர்களுக்கு பயிற்சியை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றையெல்லாம் இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விழாவில் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல பயிற்சி மைய இணை இயக்குநர் ஆர்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், ஆவின் தலைவர் த.வேலழகன,; வேலூர் வருவாய் கோட்டாச்சியர் ஏ.செல்வராஜ், எச்.சி.எல் நிறுவன துணை நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி சங்கரன், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் அருணகிரி, கருணாகரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்;.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.