எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு தொழில்நெறி முறை வழிகாட்டி புத்தகங்களை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களும் வெளியிட்டார்கள்!!
நியமன ஆணை
வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களும் +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் தொழில் வழிகாட்டி பயிற்சி முகாமை துவக்கி வைத்து 60 நபர்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் திறன் பயிற்சி சேர்க்கை, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் கையேடுகளை வெளியிட்டு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற 30 நபர்களுக்கு வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில் பணிபுரிய பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை என்.சுப்பையன், இ.ஆ.ப., திட்ட விளக்கவுரையாற்றினார்கள்.இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன்.இ.ஆ.ப., தலைமை வகித்தார்கள்.
விழாவில் வணிவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசியதாவது.மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழகத்தில் படித்த +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் இளைஞர்களுக்கு தொழில் வழகாட்டி நிகழ்ச்சி மற்றும் அம்மா இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் திறன் பயிற்சி சேர்க்கை இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் எதிர்கால இளைஞர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அளிக்கும் வகையில் அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு துறையின் கீழ் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். முகாமில் தேர்வாகதவர்களுக்கு அவர்களின் குறைகளை களைந்து மீண்டும் வெற்றி பெற தமிழக அரசு திறன் பயிற்சி மையத்தை ஒன்றையும் அமைத்து அவர்களுக்கு உதவிகளை புரிந்து வருகிறது. ஆகவே இந்த முகாமில் ஆலோசகர்கள் அளித்த அத்துணை ஆலோசனைகளையும் இளைஞர்கள் பெற்று தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட அரசாக என்னென்றும் உறுதுணையாக இருக்கும் என்று வணிவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசினார்.
விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது.
மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் இளைஞர்கள் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுவதன் மூலம் வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பினை பெற வேண்டும் இதன் மூலம் அவர்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ள வேண்டும் என்பதே தமிழக அரசின் உயரிய நோக்கமாகும். தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய குடுப்பத்தைச் சார்ந்த மாணவ மாணவியர் பயிற்சி பெறுவதற்காகவும் தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் தொழிற்சாலைகளில் தொழிலாளர் தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றிக்கு இடையேயுள்ள இடைவெளியை பூர்த்தி செய்திடவும் இளைஞர்கள் சுய தொழில் துவங்க உதவிகள் புரிந்திடும் வகையில் முதற்கட்டமாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொன்றிலும் 20 நபர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் அம்மா இருசக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி மையம் 1.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகன பழுதுபாhப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி மையம் ரூ 4 இலட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 60 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 60 நபர்கள் என்ற விதத்தில் 3600 பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கிடும் வகையில் ரூ2.94 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்திட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வங்கி நிதி மற்றும் காப்பீடு போன்ற சேவைத்துறைகள் தொடர்பான பணிகளுக்கான திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் இளைஞகர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ18 இலட்சம் செலவில் வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் +2 தேர்வில் 85 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணியுடன் கூடிய உயர் கல்வியை அளிக்கும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் இன்று முதன் முதலாக வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்படுகிறது. தேர்வு செய்;யப்பட்ட இளைஞர்களுக்கு அந்த நிறுவனத்தின் கல்லூரியில் சம்பளம் மற்றும் தங்கும் வசதியுடன் ஓராண்டு கணினிபயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் பணி உடனடியாக வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இலவசமாக உயர்கல்வியையும் படிக்க வழிவகையையும் செய்துள்ளது. இது போன்று ஏழை எளிய மாணவ மாணவியர் பயன்பெற அரசு பல்வேறு தொழிற்நிறுவனத்தில் படித்த மாணவகர்களுக்கு பயிற்சியை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றையெல்லாம் இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விழாவில் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல பயிற்சி மைய இணை இயக்குநர் ஆர்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், ஆவின் தலைவர் த.வேலழகன,; வேலூர் வருவாய் கோட்டாச்சியர் ஏ.செல்வராஜ், எச்.சி.எல் நிறுவன துணை நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி சங்கரன், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் அருணகிரி, கருணாகரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்;.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.