எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் 19 கி.மீ. தூரம் புதிய சாலைகள் அமைக்கப்படும் என ஜவ்வாதுமலையில் நடைபெற்ற கோடைவிழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்
ஜமுனாமரத்தூர் வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 20வது ஆண்டு ஜவ்வாதுமலை கோடை விழா நேற்று விமர்சையாக தொடங்கியது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார்.
புதிய சாலைகள்
மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொ) சு.சின்னசாமி அனைவரையும் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.வனரோஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனுவாசன் கோடை விழாவை துவக்கிவைத்து 6932 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,
திருவண்ணாமலை, வேலூர் உள்ளடக்கிய ஜவ்வாதுமலை பகுதியில் 53 மலை கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேல்சோழங்குப்பம் - அத்தைவாடி வனப்பகுதியில் 11 கி.மீ. தூரம் புதிய சாலையும் மேல் செண்பகத்தோப்பு - கீழ்செண்பகத்தோப்பு வரையிலான வனப்பகுதியில் 8 கி.மீ. தூரம் வரை புதிய சாலையும் மொத்தம் 19 கி.மீ. 19 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் 2 புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளது இதற்கான ஆய்வு பணி 3 நாட்களில் மேற்கொள்ளப்படும். ஜவ்வாதுமலையில் பழங்குடியின மாணவர்களின்கல்வித் தரம் உயர ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி உண்டுஉறைவிடப்பள்ளி துவங்கப்படும். ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, கொல்லி மலை, ஆகிய 3 மலைப்பகுதிகளில் புதிய சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படும். ஜவ்வாதுமலை பகுதியிலிருந்து மலைவாழ் மக்கள் கூலித்தொழிலுக்காக செம்மரங்கள் வெட்ட ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக பகுதியில் பாதுகாப்பில் புதிய சந்தன மரங்கள் வளர்க்கவும் தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஜவ்வாதுமலையில் 1 லட்சத்து 60 ஆயிரம் சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. வனத்துறை பகுதியில் பழங்குடியின மக்கள் நலனுக்காக மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோரிக்கை முகாம் நடத்தப்படும். அதன்மூலம் அவர்களது கோரிக்கை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும். வனத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 25 ஆயிரம் 2வது பரிசாக ரூ. 20 ஆயிரம், 3வது பரிசாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் பிளஸ்2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசுத்தொகையாக ரூ. 50 ஆயிரம் 2வது பரிசு ரூ. 30 ஆயிரம், 3வது பரிசு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் மேலும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த (பழங்குடியினர்) படித்த இளைஞர்களுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அம்முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கோடை விழா நடைபெறும் வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வரை செல்லும் கோடை விழா பேரணியை அமைச்சர் செல்லூர் கே.ராஜு துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சுற்றுலாத்துறை, செய்தி துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் கண்காட்சி அரங்களை திறந்துவைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.
நேற்று நடந்த இந்த தொடக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், கு.பிச்சாண்டி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பி.ரத்தினசாமி , மாவட்ட வன அலுவலர் (வடக்கு) இரா.தன்னப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைவர் அமுதா அருணாசலம், தண்டராம்பட்டு நிலவள வங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம், தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, ஜமுனாமரத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் என்.வெள்ளையன், நம்மியம்பட்டு தொடக்க வேளாண் கூட்டறவு சங்க தலைவர் கோவிந்தராஜ், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.பிரகாஷ், தனி அலுவலர் எல்.சீனுவாசன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.குமாரி நன்றி கூறினார்.
இந்த விழாவையட்டி கலை பண்பாட்டுத்துறை சார்பில் பரத நாட்டியாலயா, சென்னை வழங்கும் பரதநாட்டியம், ராக்போர்ட் குழுவினரின் சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டம், போளூர் வெற்றி பீம் கலைக்குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சியும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆரணி தாய்நாடு கலைக்குழு கலைமுரசு காசிநாதன் குழுவினரின் ஆடல்பாடல், பள்ளிக்குப்பம் கலைவாணி நாடக மன்றம் வழங்கும் கொக்கிலி ஆட்டம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சி, காட்பாடி சாரல் கலைக்குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியும் சுற்றுலா துறை சார்பில் நாட்டிய கலைஞர் நிவேதிதா பார்த்தசாரதி குழுவினரின் பரதநாட்டியம் சேரஸ் கலைகுழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதேபோல ஜமுனாமரத்தூர் ஆலங்காயம் சாலை திறந்த வெளி மைதானத்தில் பாராசைலிங் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையும் கோடை விழா மைதானத்தில் காவல்துறை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும் ஜமுனாமரத்தூர் ஏரியில் கண் கவர் வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சி மாலை 7 மணிமுதல் 8 மணிவரை நடைபெற்றது. இதேபோல மாவட்ட விளையாட்டு துறை சார்பில் வாலிபால், கபடி, தடகளம், நீளம்தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற நிகழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் மாணவர்கள் இளைஞர்கள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கோடை விழா நிறைவு விழாவின் 2ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்குகிறார், இதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறந்த அரங்குகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.