எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் 19 கி.மீ. தூரம் புதிய சாலைகள் அமைக்கப்படும் என ஜவ்வாதுமலையில் நடைபெற்ற கோடைவிழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்
ஜமுனாமரத்தூர் வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 20வது ஆண்டு ஜவ்வாதுமலை கோடை விழா நேற்று விமர்சையாக தொடங்கியது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார்.
புதிய சாலைகள்
மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொ) சு.சின்னசாமி அனைவரையும் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.வனரோஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனுவாசன் கோடை விழாவை துவக்கிவைத்து 6932 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,
திருவண்ணாமலை, வேலூர் உள்ளடக்கிய ஜவ்வாதுமலை பகுதியில் 53 மலை கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேல்சோழங்குப்பம் - அத்தைவாடி வனப்பகுதியில் 11 கி.மீ. தூரம் புதிய சாலையும் மேல் செண்பகத்தோப்பு - கீழ்செண்பகத்தோப்பு வரையிலான வனப்பகுதியில் 8 கி.மீ. தூரம் வரை புதிய சாலையும் மொத்தம் 19 கி.மீ. 19 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் 2 புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளது இதற்கான ஆய்வு பணி 3 நாட்களில் மேற்கொள்ளப்படும். ஜவ்வாதுமலையில் பழங்குடியின மாணவர்களின்கல்வித் தரம் உயர ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி உண்டுஉறைவிடப்பள்ளி துவங்கப்படும். ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, கொல்லி மலை, ஆகிய 3 மலைப்பகுதிகளில் புதிய சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படும். ஜவ்வாதுமலை பகுதியிலிருந்து மலைவாழ் மக்கள் கூலித்தொழிலுக்காக செம்மரங்கள் வெட்ட ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக பகுதியில் பாதுகாப்பில் புதிய சந்தன மரங்கள் வளர்க்கவும் தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஜவ்வாதுமலையில் 1 லட்சத்து 60 ஆயிரம் சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. வனத்துறை பகுதியில் பழங்குடியின மக்கள் நலனுக்காக மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோரிக்கை முகாம் நடத்தப்படும். அதன்மூலம் அவர்களது கோரிக்கை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும். வனத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 25 ஆயிரம் 2வது பரிசாக ரூ. 20 ஆயிரம், 3வது பரிசாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் பிளஸ்2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசுத்தொகையாக ரூ. 50 ஆயிரம் 2வது பரிசு ரூ. 30 ஆயிரம், 3வது பரிசு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் மேலும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த (பழங்குடியினர்) படித்த இளைஞர்களுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அம்முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கோடை விழா நடைபெறும் வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வரை செல்லும் கோடை விழா பேரணியை அமைச்சர் செல்லூர் கே.ராஜு துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சுற்றுலாத்துறை, செய்தி துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் கண்காட்சி அரங்களை திறந்துவைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.
நேற்று நடந்த இந்த தொடக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், கு.பிச்சாண்டி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பி.ரத்தினசாமி , மாவட்ட வன அலுவலர் (வடக்கு) இரா.தன்னப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைவர் அமுதா அருணாசலம், தண்டராம்பட்டு நிலவள வங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம், தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, ஜமுனாமரத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் என்.வெள்ளையன், நம்மியம்பட்டு தொடக்க வேளாண் கூட்டறவு சங்க தலைவர் கோவிந்தராஜ், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.பிரகாஷ், தனி அலுவலர் எல்.சீனுவாசன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.குமாரி நன்றி கூறினார்.
இந்த விழாவையட்டி கலை பண்பாட்டுத்துறை சார்பில் பரத நாட்டியாலயா, சென்னை வழங்கும் பரதநாட்டியம், ராக்போர்ட் குழுவினரின் சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டம், போளூர் வெற்றி பீம் கலைக்குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சியும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆரணி தாய்நாடு கலைக்குழு கலைமுரசு காசிநாதன் குழுவினரின் ஆடல்பாடல், பள்ளிக்குப்பம் கலைவாணி நாடக மன்றம் வழங்கும் கொக்கிலி ஆட்டம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சி, காட்பாடி சாரல் கலைக்குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியும் சுற்றுலா துறை சார்பில் நாட்டிய கலைஞர் நிவேதிதா பார்த்தசாரதி குழுவினரின் பரதநாட்டியம் சேரஸ் கலைகுழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதேபோல ஜமுனாமரத்தூர் ஆலங்காயம் சாலை திறந்த வெளி மைதானத்தில் பாராசைலிங் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையும் கோடை விழா மைதானத்தில் காவல்துறை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும் ஜமுனாமரத்தூர் ஏரியில் கண் கவர் வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சி மாலை 7 மணிமுதல் 8 மணிவரை நடைபெற்றது. இதேபோல மாவட்ட விளையாட்டு துறை சார்பில் வாலிபால், கபடி, தடகளம், நீளம்தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற நிகழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் மாணவர்கள் இளைஞர்கள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கோடை விழா நிறைவு விழாவின் 2ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்குகிறார், இதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறந்த அரங்குகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப