எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் 19 கி.மீ. தூரம் புதிய சாலைகள் அமைக்கப்படும் என ஜவ்வாதுமலையில் நடைபெற்ற கோடைவிழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்
ஜமுனாமரத்தூர் வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 20வது ஆண்டு ஜவ்வாதுமலை கோடை விழா நேற்று விமர்சையாக தொடங்கியது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார்.
புதிய சாலைகள்
மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொ) சு.சின்னசாமி அனைவரையும் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.வனரோஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனுவாசன் கோடை விழாவை துவக்கிவைத்து 6932 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,
திருவண்ணாமலை, வேலூர் உள்ளடக்கிய ஜவ்வாதுமலை பகுதியில் 53 மலை கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேல்சோழங்குப்பம் - அத்தைவாடி வனப்பகுதியில் 11 கி.மீ. தூரம் புதிய சாலையும் மேல் செண்பகத்தோப்பு - கீழ்செண்பகத்தோப்பு வரையிலான வனப்பகுதியில் 8 கி.மீ. தூரம் வரை புதிய சாலையும் மொத்தம் 19 கி.மீ. 19 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் 2 புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளது இதற்கான ஆய்வு பணி 3 நாட்களில் மேற்கொள்ளப்படும். ஜவ்வாதுமலையில் பழங்குடியின மாணவர்களின்கல்வித் தரம் உயர ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி உண்டுஉறைவிடப்பள்ளி துவங்கப்படும். ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, கொல்லி மலை, ஆகிய 3 மலைப்பகுதிகளில் புதிய சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படும். ஜவ்வாதுமலை பகுதியிலிருந்து மலைவாழ் மக்கள் கூலித்தொழிலுக்காக செம்மரங்கள் வெட்ட ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக பகுதியில் பாதுகாப்பில் புதிய சந்தன மரங்கள் வளர்க்கவும் தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஜவ்வாதுமலையில் 1 லட்சத்து 60 ஆயிரம் சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. வனத்துறை பகுதியில் பழங்குடியின மக்கள் நலனுக்காக மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோரிக்கை முகாம் நடத்தப்படும். அதன்மூலம் அவர்களது கோரிக்கை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும். வனத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 25 ஆயிரம் 2வது பரிசாக ரூ. 20 ஆயிரம், 3வது பரிசாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் பிளஸ்2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசுத்தொகையாக ரூ. 50 ஆயிரம் 2வது பரிசு ரூ. 30 ஆயிரம், 3வது பரிசு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் மேலும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த (பழங்குடியினர்) படித்த இளைஞர்களுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அம்முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கோடை விழா நடைபெறும் வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வரை செல்லும் கோடை விழா பேரணியை அமைச்சர் செல்லூர் கே.ராஜு துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சுற்றுலாத்துறை, செய்தி துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் கண்காட்சி அரங்களை திறந்துவைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.
நேற்று நடந்த இந்த தொடக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், கு.பிச்சாண்டி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பி.ரத்தினசாமி , மாவட்ட வன அலுவலர் (வடக்கு) இரா.தன்னப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைவர் அமுதா அருணாசலம், தண்டராம்பட்டு நிலவள வங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம், தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, ஜமுனாமரத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் என்.வெள்ளையன், நம்மியம்பட்டு தொடக்க வேளாண் கூட்டறவு சங்க தலைவர் கோவிந்தராஜ், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.பிரகாஷ், தனி அலுவலர் எல்.சீனுவாசன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.குமாரி நன்றி கூறினார்.
இந்த விழாவையட்டி கலை பண்பாட்டுத்துறை சார்பில் பரத நாட்டியாலயா, சென்னை வழங்கும் பரதநாட்டியம், ராக்போர்ட் குழுவினரின் சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டம், போளூர் வெற்றி பீம் கலைக்குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சியும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆரணி தாய்நாடு கலைக்குழு கலைமுரசு காசிநாதன் குழுவினரின் ஆடல்பாடல், பள்ளிக்குப்பம் கலைவாணி நாடக மன்றம் வழங்கும் கொக்கிலி ஆட்டம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சி, காட்பாடி சாரல் கலைக்குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியும் சுற்றுலா துறை சார்பில் நாட்டிய கலைஞர் நிவேதிதா பார்த்தசாரதி குழுவினரின் பரதநாட்டியம் சேரஸ் கலைகுழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதேபோல ஜமுனாமரத்தூர் ஆலங்காயம் சாலை திறந்த வெளி மைதானத்தில் பாராசைலிங் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையும் கோடை விழா மைதானத்தில் காவல்துறை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும் ஜமுனாமரத்தூர் ஏரியில் கண் கவர் வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சி மாலை 7 மணிமுதல் 8 மணிவரை நடைபெற்றது. இதேபோல மாவட்ட விளையாட்டு துறை சார்பில் வாலிபால், கபடி, தடகளம், நீளம்தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற நிகழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் மாணவர்கள் இளைஞர்கள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கோடை விழா நிறைவு விழாவின் 2ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்குகிறார், இதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறந்த அரங்குகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்2 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2024.
22 Apr 2024 -
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்